புவிவெப்பமடைதலைத் தடுக்க செய்யவேண்டியதெல்லாம் ஒன்;று காபனீரொட்சைட் வெளியிடப்படுவதைக் குறைக்கவேண்டும். அதற்கு காபனை வெளியிடும் தொழிற்சாலைகள், வாகனங்கள் முதலியவற்றின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும். இது உண்மையில் அசாத்தியமானவொன்று. இது ஒரு நாட்டின் வளர்ச்சியைக் குன்றச் செய்யும் என்பதால் எந்த நாடும் தமது உற்பத்தியைக் குறைப்பதில் உடன்படுவதில்லை. இரண்டாவது வழிமண்டலத்தில் காபன் வெளியிடப்படும் விகிதாசாரத்தை ஒவ்வொரு நாடும் குறைத்துக்கொள்ளவேண்டும். இதுவும் தமது பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்பதால் வளர்முக நாடுகள் இதற்கும் ஒத்துக்கொள்வில்லை. இவ்வாறு செய்தால்கூட வருடத்திற்கு 1 டிரில்லியன் டொலர்கள் நட்டம் ஏற்படும். இந்த இரண்டு வழிமுறைகளும் தமக்குப் பாதகமாக உள்ள காரணத்தினால்தான் மேற்கூறிய மாநாடுகளும் உடன்படிக்கைகளும்கூட தோல்வியில் முடிவடைந்தன. எனவே யாருக்கும் பிரச்சினையில்லாத மூன்றாவது ஒரு வழிமுறை பற்றி சிந்திப்பதன்பால் கவனம்குவிக்கப்படட்டது. அதன் விளைவுதான் புவிப்பொறியியல் என்ற புதியதொரு வழிமுறை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
தாய்
எம் போல் ஒரே முறை பிறப்பதில்லை
ஒவ்வொரு பிரசவத்திலும்
பிறப்பெய்துகின்றாள்.
தாய்
ஒரே முறை இறப்பதுமில்லை
ஒவ்வொரு பிரசவத்திலும்
இறப்போடு சங்கமிக்கின்றாள்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
இப் பேரண்டத்தின் பிறப்புக்குத் துணையான அனைத்துச் சக்திகளையும் ஒருங்கிணைத்து ஒருமைச் சித்தாந்தத்தைக் கண்டறியவேண்டும் என்பதுதான் விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் கணவு. இதனை நனவாக்குவதனைத் தனது வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்டு செயற்படுகின்றார் பேராசிரியர் ஹாக்கிங். “இவ்வொருமைச் சித்தாந்தத்தைக் கண்டறிந்தால் விஞ்ஞானிகள், தத்துவமேதைகள், சிந்தனையாளர்கள், அறிவியல் விற்பன்னர்கள் யாவரும் சாதாரண மனிதர்களாகிவிடுவர்” என்பதாக அவர் கருத்துரைக்கின்றார்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
பண்டா கரடியின் வாழ்கைச் சுற்று எப்படியென்பதை ஆரம்பம் முதல் படங்களாகத் தந்துள்ளேன்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
கடந்த சனிக்கிழமை (10/12/2011) கேகாலை மாவட்டத்தில் வரக்காப்பொலை பொலிஸ் பரிவிற்கு உட்பட்ட கொடவெலை எனும் கிராமத்தில் பொதுமக்களுக்காக நடமாடும் மறுத்துவ முகாமொன்று நடைபெற்றது. இம்முகாம் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் சமூகசேவைப் பகுதியின் ஏற்பாட்டில் வரக்காப்பொலை பொலிஸின் ஆதரவோடு கொடவெலை சேதாராம பௌத்த விகாரையில் காலை 8 மணியிலிருந்து மாலை 3 மணிவரை நடைபெற்றது. சுமார் 250 இற்கும் அதிகமான சிங்கள, முஸ்லிம் பொதுமக்கள் இதனால் பயனடைந்துள்ளனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
இன்று (திங்கள்) முதல் ஆரம்பித்திருக்கும் க. பொ. த. சாதாரண தர பரீட்சையில் 5 இலட்சத்து 31 ஆயிரம் மாணவர்கள் தோற்றியுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார். கடந்த காலங்களை விடக் கூடுதலான மாணவர்கள் இவ்வாண்டுக்கான (2011) க. பொ. த. சா/தரப் பரீட்சையில் தோற்றியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இம்முறை நடைபெறும் பரீட்சையில் பாடசாலைப் பரீட்சார்த்திகளாக 3 இலட்சத்து 85 ஆயிரம் பேரும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக ஒரு இலட்சத்து 46 ஆயிரம் பேரும் தோற்றுகின்றனர். கடந்த வருடத்தைவிட இவ்வருடம் 22 ஆயிரத்து 911 பரீட்சார்த்திகள் மேலதிகமாகத் தோற்றுகின்றனர். இவர்களுக்காக நாடு முழுவதிலும் 3 ஆயிரத்து 921 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
இலங்கையில் போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் அதிகளவிலான போதைப் பொருள்கள் பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து கொண்டுவரப்படுவதாகவும் ஆபத்தான போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரசபையின் (National Dangerous Drugs Control Board) அறிக்கை தெரிவிக்கின்றது. 2010 ஆண்டு போதைப் பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட 29,790 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் 60% ஆனோர் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள், 39% ஆனோர் 20 வயதை நெருங்கியவர்களாவர். 2005 முதல் 2010 வரை சிறுவர்களிடத்தில் குறைந்திருந்த போதைப்பொருள் பாவனை மீண்டும் தலை தூக்கிவருவதாகவும் புகைத்தல் மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் பேரா. தாலோ பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
நிச்சயமாக ட்ரெபிக் பொலிஸ்காரர்கள் குழம்பிப்போவார்கள்...
ஆலிப் அலி (இஸ்லாஹி)
மேலதிக படங்களுக்கு...
உங்கள் கருத்து:
உயர் சாதிக்காரப் பையன் ஒருவனின் பெயரும் இவன் பெயரும் ஒன்றாய் இருந்தது என்ற காரணத்துக்காக வட இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்த பையன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான் என அம்மாநில பொலிசார் கூறுகின்றனர்.
பஸ்தீ மாவட்டத்தில் ராதாப்பூர் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்தக் கிராமத்தில் வாழும் ராம் சுமர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு நீரஜ் குமார் தீரஜ் குமார் என்று இரு மகன்கள். இதே ஊரில் வாழும் ஜவஹர் சவுத்ரி என்ற உயர் சாதிக்காரருடைய மகன்களும் இதே பெயர்களைக் கொண்டவர்கள்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
சிலர் எந்நேரமும் தமது கையடக்கத் தொலைபேசியை இயக்கிக்கொண்டே இருப்பார்கள். யாருக்காவது sms அல்லது Missed call பண்ணிக்கொண்டே இருப்பார்கள். யாராவது தனக்கும் sms, call பண்ணமாட்டார்களா என்று ஏங்குவார்கள். இவர்கள்தான் கையடக்கத் தொலைபேசிக்கு அடிமையானவர்கள். இதனை அவர்களே உணரமாட்டார்கள். இது MPA (Mobile Phone Addiction) என அழைக்கப்படுகின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
மாட்டை கயிற்றில் கட்டிவிட்டால் குறிப்பிட்ட எல்லைக்குள் மாத்திரம் மேயும். கயிறின்றி அவிழ்த்துவிட்டால் அனைத்தையுமே மேய்ந்துவிடும். அதுபோன்றுதான் தொலைபேசித் தொழில்நுட்பம் கம்பிவழித் தொழில்நுட்பமாக இருந்தபோது மனிதனின் மீதான அதன் செல்வாக்கு ஒரு எல்லைக்குள்ளேயே இருந்தது. ஆனால், கம்பியில்லாத் தொடர்பாடல் தொழில்நுட்பம் அறிமுகமாகி, கையடக்கத் தொலைபேசி வந்த பின்னர் எப்போதும் எங்கிருந்தும் எவரும், எவருடனும் தொடர்புகொள்ளும் வசதி ஏற்பட்டது. இதனால் தொலைபேசிகள் சிலபோது “தொல்லை” பேசிகளாகவும் ஆகிவிடுகின்றன.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
தேசிய புவியியல் பயணர் சஞ்சிகையின் புதிய கணிப்பீட்டின் படி சுற்றுலாப் பயணிகளுக்கான சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது தொடர்பானதொரு அறிக்கையும் தேசிய புவியியல் பயணர் சஞ்சிகை சார்பாக வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டில் இருந்ததைவிட இவ்வருடம் 52 வீதத்தால் சுற்றுலாத்துறை வளர்ச்சி அடைந்துள்ளது. இதுவரை 750,000 உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது எதிர்வரும் 2016ல் 2.5 மில்லியனாக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்காக அதிகமானளவு உல்லாச விடுதிகளை அமைக்க சுற்றுலாத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
அண்மையில் அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம் ஸியாரம் இடிப்பினைத் தொடர்ந்து நாட்டின் பல பாகங்களிலும் ஒரு துண்டுப் பிரசுரம் வினியோகிக்கப்பட்டிருந்தது. அதில் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் அல்லாஹ்வையும் மிகக் கீழ்த்தரமான முறையில் கொச்சைப்படுத்தி தூற்றி எழுதப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் (4/11/2011) கேகாலை மாவட்டத்தில் வரக்காப்பொலை நகரிற்கு அண்மையில் அமைந்துள்ள கொடவெலை எனும் கிராமத்தில் இதுபோன்றதொரு அசம்பாவிதம் நடந்துள்ளது.
படங்கள் இணைக்கப்பட்டுள்ளன...
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
சில ஆமைகள் தாம் பிறந்த இடத்திலிருந்து சில கி.மீ. களுக்கு உள்ளேயே வாழ்ந்து மடிகின்றன. ஆனல் அதிகமான ஆமைகள் தாம் பிறந்த இடத்தை விட்டும் ஆயிரக்கணக்கான கி.மீ. களுக்கு அப்பால் தேசாந்திரப் பயணம் செல்கின்றன. ஒரு பெண் ஆமையின் ஓட்டுப் பகுதியில் ட்ரான்ஸ்மீட்டர் கட்டிவிடப்பட்டு செய்மதி ஒன்றின் மூலம் அதன் பயணம் கண்காணிக்கப்பட்டது. அது தான் முட்டையிடும் பிரதேசமான பாப்புவா நியுகினியா கடற்கரைக்கு 647 நாட்கள் பயணித்து 12,744 மைல் தொலைவு கடந்துசென்று சரியான இலக்கை அடைந்தது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து: