"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

17 March 2013

சாவதேச நீர் தினம் - மார்ச் 22


இந்த நாடு நமக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு அருவிகளிலும், ஆறுகளிலும், ஓடும் ஒளிர்விடும் நீர் வெறுமனே நீர் அன்று. இது எம் முன்னோரின் இரத்தம், அவை புனிதமானது என்பதை நினைவு கூர வேண்டும். எமது பிள்ளைகளுக்கும் அவற்றின் புனிதத் தன்மையையிட்டு அறிவுறுத்த வேண்டும்.” (செவ்விந்தியத் தலைவர் Siyattle)

ஐரோப்பியர்கள் படையெடுத்துவந்து அமெரிக்காவின் காடுகளையும் நீர் நிலைகளையும் அருவிகளையும் ஆறுகளையும் துவம்சம் செய்தபோது செவ்விந்தியர்களின் தலைவர் Siyattle படைத்தளபதிக்கு எழுதிய கடித்த்தில் நீரின் பெறுமதியை அழக்காக் குறித்துக்காட்டியுள்ளார்தொழில் புரட்சியின் பின் உலக நாடுகள் நீரை மாசுபடுத்தும் பணிகளில் ஈடுபட்டதைத் தடுப்பதற்காகவும் நீரின் பெறுமதியை உணர்ந்த்தன் விளைவாகவும் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற சுற்றாடல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகள் மகாநாட்டில் (United Nations Conference on Environment and Development (UNCED) 21ம் நூற்றாண்டுக்கா முன்வைக்கப்பட்ட செயல்திட்டத்தின்படி மார்ச் 22 ஆம் திகதியை உலக நீர் தினமாக (World water Day)) ஐ.நா.பொதுச் சபை பிரகடனம் செய்தது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

இந்த நாடு நமக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு அருவிகளிலும், ஆறுகளிலும், ஓடும் ஒளிர்விடும் நீர் வெறுமனே நீர் அன்று. இது எம் முன்னோரின் இரத்தம், அவை புனிதமானது என்பதை நினைவு கூர வேண்டும். எமது பிள்ளைகளுக்கும் அவற்றின் புனிதத் தன்மையையிட்டு அறிவுறுத்த வேண்டும்.” (செவ்விந்தியத் தலைவர் Siyattle)

ஐரோப்பியர்கள் படையெடுத்துவந்து அமெரிக்காவின் காடுகளையும் நீர் நிலைகளையும் அருவிகளையும் ஆறுகளையும் துவம்சம் செய்தபோது செவ்விந்தியர்களின் தலைவர் Siyattle படைத்தளபதிக்கு எழுதிய கடித்த்தில் நீரின் பெறுமதியை அழக்காக் குறித்துக்காட்டியுள்ளார்தொழில் புரட்சியின் பின் உலக நாடுகள் நீரை மாசுபடுத்தும் பணிகளில் ஈடுபட்டதைத் தடுப்பதற்காகவும் நீரின் பெறுமதியை உணர்ந்த்தன் விளைவாகவும் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற சுற்றாடல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகள் மகாநாட்டில் (United Nations Conference on Environment and Development (UNCED) 21ம் நூற்றாண்டுக்கா முன்வைக்கப்பட்ட செயல்திட்டத்தின்படி மார்ச் 22 ஆம் திகதியை உலக நீர் தினமாக (World water Day)) ஐ.நா.பொதுச் சபை பிரகடனம் செய்தது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

12 March 2013

ஹலால் சின்னம் வெளிநாட்டு ஏற்றுமதிகளுக்கு மாத்திரம்: கட்டணம் அறவிடப்படாது



வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உற்பத்திகளுக்கு மாத்திரமே ஹலால் சான்றிதழ் பொறிக்கப்படும். உள்ளூரில் சந்தைப்படுத்தப்படும் உற்பத்திகளில் ஹலால் சான்றிதழ் பொறிக்கப்படமாட்டாது. அத்துடன் வெளிநாட்டு ஏற்றுமதிப் பொருட்களுக்கு சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டுக்கு கட்டணம் அறவிடப்படமாட்டாது என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்கள் தெரிவித்தார். நேற்று கொழும்பில் நடைபெற்ற விசேட பத்திரிகையாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவோர் வேண்டுகோள்விடுக்கும்பட்‌சத்தில் மாத்திரம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழமைபோன்று ஹலால் சான்றிதழை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சமாதானமும் இன நல்லுறவும்மிக்க இலங்கையைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் நாம் சில விட்டுக் கொடுப்புக்களையும் தியாகங்களையும் செய்ய வேண்டியது அவசியம் எனவும் அதனப்படையிலேயே உலமா சபை இவ்வாறானதொரு தீர்மானத்திற்கு உடன்பட்டதாகவும் அவர் இங்கு மேலும் குறிப்பிட்டார்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)


வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உற்பத்திகளுக்கு மாத்திரமே ஹலால் சான்றிதழ் பொறிக்கப்படும். உள்ளூரில் சந்தைப்படுத்தப்படும் உற்பத்திகளில் ஹலால் சான்றிதழ் பொறிக்கப்படமாட்டாது. அத்துடன் வெளிநாட்டு ஏற்றுமதிப் பொருட்களுக்கு சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டுக்கு கட்டணம் அறவிடப்படமாட்டாது என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்கள் தெரிவித்தார். நேற்று கொழும்பில் நடைபெற்ற விசேட பத்திரிகையாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவோர் வேண்டுகோள்விடுக்கும்பட்‌சத்தில் மாத்திரம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழமைபோன்று ஹலால் சான்றிதழை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சமாதானமும் இன நல்லுறவும்மிக்க இலங்கையைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் நாம் சில விட்டுக் கொடுப்புக்களையும் தியாகங்களையும் செய்ய வேண்டியது அவசியம் எனவும் அதனப்படையிலேயே உலமா சபை இவ்வாறானதொரு தீர்மானத்திற்கு உடன்பட்டதாகவும் அவர் இங்கு மேலும் குறிப்பிட்டார்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

10 March 2013

கார்ட்ரூன், எனிமேஷன் தொழில்நுட்பம்



விண்கற்கள் பூமியுடன் மோதி பூமி அழிவதுபோன்றும், கடல் பெருக்கெடுத்து நகர்ப்புறத்தினுள் நுழைவதுபோன்றும் சூராவளிக் காற்று சுற்றிச் சுழன்றடிப்பதுபோன்றும் எரிமலைகள் குழம்புகளைக் கக்கி வெடித்துச் சிதறுவதுபோன்றும், வேற்றுக் கிரகங்களுக்குச் சென்று கிரக வாசிகளுடன் போர்புரிவதுபோன்றும் கனவுக்குள் கணவுகாண்பது போன்றும் இன்று மனிதனின் அபூர்வமான கற்பனைகளோடும் இத்தொழில்நுட்பங்களின் உதவிகளோடும் வித்தியாச வித்தியாசமான திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வெளிவந்த வண்ணமிருக்கின்றன.

ஆலிப் அலி (இஸ்லாஹி)


விண்கற்கள் பூமியுடன் மோதி பூமி அழிவதுபோன்றும், கடல் பெருக்கெடுத்து நகர்ப்புறத்தினுள் நுழைவதுபோன்றும் சூராவளிக் காற்று சுற்றிச் சுழன்றடிப்பதுபோன்றும் எரிமலைகள் குழம்புகளைக் கக்கி வெடித்துச் சிதறுவதுபோன்றும், வேற்றுக் கிரகங்களுக்குச் சென்று கிரக வாசிகளுடன் போர்புரிவதுபோன்றும் கனவுக்குள் கணவுகாண்பது போன்றும் இன்று மனிதனின் அபூர்வமான கற்பனைகளோடும் இத்தொழில்நுட்பங்களின் உதவிகளோடும் வித்தியாச வித்தியாசமான திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வெளிவந்த வண்ணமிருக்கின்றன.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...