சிறுவயது முதல் எனக்குப் பிடித்தமான செல்லப்
பிராணி அணில்தான். இன்னும் ஞாபகம். எத்தனையோ தடவை மரங்களில் ஏறி அணில் கூடுகளைப் பிரித்து
அதில் உள்ள அணில் குஞ்சுகளை, தாய் அணில் கத்தக் கத்தக் கபளீகரம் செய்துகொண்டுவந்து
வீட்டில் பெட்டிப் பால் கொடுத்து வளர்க்க முற்பட்டுள்ளேன். பாவம். ஒன்றும் பிழைத்ததில்லை.
எங்கள் வீட்டின் முன் நிற்கும் கொய்யா மரத்திற்கு கூட்டமாக வரும் அணில்களையும் அவை
கொய்யாப் பழங்கள் உண்ணும் அழகையும் சேட்டை செய்து ஒன்றை ஒன்று விரட்டிப் பிடித்து விளையாடும்
குறும்புகளையும் பார்த்து மகிழும் வழக்கம் இப்போதும் உண்டு. இவற்றின் குறும்புத்தனமான
செயல்களினாலோ என்னவோ அவற்றுக்கு பிள்ளை என்றும் கூறுகின்றனர்.
03 June 2018
Subscribe to:
Posts (Atom)