"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

23 March 2014

பிந்திய வயதுத் திருமணமும் அதனால் ஏற்படும் சீரழிவுகளும்

இன்று பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் சமூகத்தில் ஆண்களின் திருமண வயது பின்போடப்பட்டு வருகின்றது. எம்மில் இருந்து இரண்டு தலைமுறைகள் முன்னால் சென்று பார்த்தால் அவர்களில் ஆண்களும் பெண்களும் இருபது வயதிற்குள் திருமணம் முடித்து பத்துபண்ணிரெண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்து சந்தோசமாக வாழ்ந்த வரலாற்றைக் காண முடியும். அப்போதெல்லாம் விவாகரத்துகளும் நிகழ்வது மிகக் குறைவு. இன்று கல்விதொழில்பொருளாதாரம் என்ற காரணங்களை முன்வைத்து எமது சமூகத்தில் ஓர் ஆண்திருமணம் முடிக்க இருபத்தி எட்டுமுப்பது வயது வரை நாட்களைத் தள்ளிப்போடுகின்றான். இப்பிந்திய வயதுத் திருமணங்களால் எமது சமூகத்தில் இளைஞர்கள்யுவதிகளிடத்தில் பாரிய சீரழிவுகள் தலைதூக்கி வருவதனை வெளிப்படையாகவே காண முடிகின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A.
இன்று பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் சமூகத்தில் ஆண்களின் திருமண வயது பின்போடப்பட்டு வருகின்றது. எம்மில் இருந்து இரண்டு தலைமுறைகள் முன்னால் சென்று பார்த்தால் அவர்களில் ஆண்களும் பெண்களும் இருபது வயதிற்குள் திருமணம் முடித்து பத்துபண்ணிரெண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்து சந்தோசமாக வாழ்ந்த வரலாற்றைக் காண முடியும். அப்போதெல்லாம் விவாகரத்துகளும் நிகழ்வது மிகக் குறைவு. இன்று கல்விதொழில்பொருளாதாரம் என்ற காரணங்களை முன்வைத்து எமது சமூகத்தில் ஓர் ஆண்திருமணம் முடிக்க இருபத்தி எட்டுமுப்பது வயது வரை நாட்களைத் தள்ளிப்போடுகின்றான். இப்பிந்திய வயதுத் திருமணங்களால் எமது சமூகத்தில் இளைஞர்கள்யுவதிகளிடத்தில் பாரிய சீரழிவுகள் தலைதூக்கி வருவதனை வெளிப்படையாகவே காண முடிகின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A.

உங்கள் கருத்து:

18 March 2014

பிரபஞ்ச உருவாக்கம், பிரபஞ்ச அழிவு, மஹ்ஷர் வெளி

உலக அழிவு எப்படி நிகழும் என்பதை அச்சொட்டாக இல்லாவிடினும்  அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் நிழலில் ஓரளவேனும் விளங்கச் சற்று முயற்சிப்போம். நவீன விஞ்ஞான ஆய்வுகள் சூரிய மண்டலம் உறுப்பெற்று அதனுடைய கிரகங்கள் அனைத்தும் முழுவளர்ச்சி பெற்று அதாவது பிரபஞ்சம் படைக்கப்பட்டு இற்றைக்கு 13.5 பில்லியன் வருடங்களாகின்றன என்கின்றது. அத்தோடு இப்பிரபஞ்சம் தொடர்ந்தும் வினாடிக்கு 300,000 Km வேகத்தில் விரிவடைவதாகவும் குறிப்பிடுகின்றது. இவ்வாறு விரிவடையும் பிரபஞ்சம் முழுமையாக அழியும் என்பதாக இஸ்லாம் கூறிக்கொண்டிருக்கின்றது. இன்று விஞ்ஞானமும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. பிரபஞ்ஞ அழிவு பற்றி அறிவதற்கு அதன் உருவாக்கம் பற்றி சிறிது அறிந்துகொள்வது அவசியம்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)
உலக அழிவு எப்படி நிகழும் என்பதை அச்சொட்டாக இல்லாவிடினும்  அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் நிழலில் ஓரளவேனும் விளங்கச் சற்று முயற்சிப்போம். நவீன விஞ்ஞான ஆய்வுகள் சூரிய மண்டலம் உறுப்பெற்று அதனுடைய கிரகங்கள் அனைத்தும் முழுவளர்ச்சி பெற்று அதாவது பிரபஞ்சம் படைக்கப்பட்டு இற்றைக்கு 13.5 பில்லியன் வருடங்களாகின்றன என்கின்றது. அத்தோடு இப்பிரபஞ்சம் தொடர்ந்தும் வினாடிக்கு 300,000 Km வேகத்தில் விரிவடைவதாகவும் குறிப்பிடுகின்றது. இவ்வாறு விரிவடையும் பிரபஞ்சம் முழுமையாக அழியும் என்பதாக இஸ்லாம் கூறிக்கொண்டிருக்கின்றது. இன்று விஞ்ஞானமும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. பிரபஞ்ஞ அழிவு பற்றி அறிவதற்கு அதன் உருவாக்கம் பற்றி சிறிது அறிந்துகொள்வது அவசியம்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

02 March 2014

ஜெல்லி மீன்கள் - Jellyfishes

அண்மையில் கௌனிபியகம வோட்ட வேல்ட் காட்சியகத்திற்கு ஒரு மினி சுற்றுலா செல்லக்கிடைத்தது. அழகழகான கடல்வாழ் மீனினங்களின் பலதரப்பட்ட மீன் வகைகளை அங்கே தொட்டிகளில் காட்சிப்படுத்தியிருந்தனர்இறைவனின் படைப்புகளின் அழகையும் வணப்பையும் கண்டு பிரம்மித்துப் போனேன். அவனது படைப்புகளின் வரிசையில் காணக்கிடைத்த ஒரு விநோதமான வித்தியாசமான உயிரினம் தான் ஜெல்லி மீன்கள். ஜெல்லி மீன் தொட்டிக்கு அருகாமையில் தொங்கவிடப்பட்டிருந்த விவரணப் பலகையின் வாசகங்கள்தான் இத்தொடரில் ஜெல்லி மீன்கள் பற்றி என்னை எழுதத் துண்டியது. ஜெல்லி மீன் Jellyfish” என ஆங்கிலத்திலும் சொறிமுட்டை என தமிழிலும் அழைக்கப்படுகின்றன. இவை க்நிடேரிய (Cnidaria) உயிரினத் தொகுதியைச் சேர்ந்த ஒரு கடல் வாழ் உயிரினமாகும். இவை கடலின்  ஆழமான பகுதிகளில் மட்டுமல்லாது கரைப் பகுதிகளிலும் வாழும் தன்மைகொண்டவை. அவை கரையில் ஒதுங்கிக் கிடக்கும்போது பார்வைக்கு மிக அழகாகத் தென்பட்டாலும்  தீங்கு விளைவிக்கும் செயல்களையும் செய்கின்றன.

ஆலிப் அலி (இஸ்லாஹி)
அண்மையில் கௌனிபியகம வோட்ட வேல்ட் காட்சியகத்திற்கு ஒரு மினி சுற்றுலா செல்லக்கிடைத்தது. அழகழகான கடல்வாழ் மீனினங்களின் பலதரப்பட்ட மீன் வகைகளை அங்கே தொட்டிகளில் காட்சிப்படுத்தியிருந்தனர்இறைவனின் படைப்புகளின் அழகையும் வணப்பையும் கண்டு பிரம்மித்துப் போனேன். அவனது படைப்புகளின் வரிசையில் காணக்கிடைத்த ஒரு விநோதமான வித்தியாசமான உயிரினம் தான் ஜெல்லி மீன்கள். ஜெல்லி மீன் தொட்டிக்கு அருகாமையில் தொங்கவிடப்பட்டிருந்த விவரணப் பலகையின் வாசகங்கள்தான் இத்தொடரில் ஜெல்லி மீன்கள் பற்றி என்னை எழுதத் துண்டியது. ஜெல்லி மீன் Jellyfish” என ஆங்கிலத்திலும் சொறிமுட்டை என தமிழிலும் அழைக்கப்படுகின்றன. இவை க்நிடேரிய (Cnidaria) உயிரினத் தொகுதியைச் சேர்ந்த ஒரு கடல் வாழ் உயிரினமாகும். இவை கடலின்  ஆழமான பகுதிகளில் மட்டுமல்லாது கரைப் பகுதிகளிலும் வாழும் தன்மைகொண்டவை. அவை கரையில் ஒதுங்கிக் கிடக்கும்போது பார்வைக்கு மிக அழகாகத் தென்பட்டாலும்  தீங்கு விளைவிக்கும் செயல்களையும் செய்கின்றன.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...