ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு பால்வீதியும் மற்றொன்றை விட்டு ஒளியாண்டளவு தூரத்திலேயே அமைந்துள்ளன. சூரியன் வருடத்துக்கு 9,370,800,000,000 கி.மீ வேத்தில் பயணிக்கின்றது. இவ்வாறே ஒவ்வொரு நட்சத்திரங்களும் சூரியனைவிடவும் அதிக கதியில் பயணிக்கின்றன. கோள்களும் பயணிக்கின்றன. கெலக்ஸிகளும் பால்வீதிகளும் இவ்வாறுதான் விண்ணில் பயணித்துக்கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று மோதாதவிதத்தில் பயணிக்கும் அளவுக்கு இப்பிரபஞ்சம் எவ்வளவு விசாலமாக இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.
ஆலிப் அலி (இஸ்லாஹியாஹ்)27 April 2011
முயல்களின் வாழ்க்கை வட்டம்
பொதுவாக முயல்கள் பூமியின் அனைத்துப் பகுதிகளிலும் வாழ்கின்றன. காடுகளிலும் பாலை வனப்பகுதிகளிலும் பனிப்பிரதேசங்களிலும் வீடுகள் மற்றும் பண்ணைகள் என அனைத்துப் பகுதிகளிலும் இவற்றைக் கண்டுகொள்ளலாம். காட்டில் வசிக்கும் முயலுக்கும் நாம் செல்லப்பிராணியாக வீட்டில் வளர்க்கும் முயலுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. காட்டு முயல்கள் வீட்டு முயல்களை விடவும் அளவில் பெரியன. ஒரு காட்டு முயல் 20 – 35 செ.மீ. நீளத்தையும் 3கி.கி. நிறையும் கொண்டிருக்கும். வீட்டு முயல் 20 செ.மீ. நீளமும் 2.5கி.கி. நிறையையும் கொண்டிருக்கும்.
ஆலிப் அலி (இஸ்லாஹியாஹ்)உங்கள் கருத்து:
Labels:
படைப்பினங்கள்
25 April 2011
19 April 2011
ரூஹ் ஊதப்படுவது 4 மாதத்திலல்ல. 42ம் நாளில்
“முளையத்தில் 42 இரவுகள் கடந்ததன் பின்னர் அதனிடம் அல்லாஹ் ஒரு வானவரை அனுப்புகின்றான். அவர் அதனை வடிவமைக்கின்றார். மேலும் காதுகள், கண்கள், தோல், தசைகள், என்புகள் ஆகியவற்றையும் உருவமைக்கின்றார். பின்பு என் இரட்சகனே! இது ஆணா அல்லது பெண்ணா? என்று வினவுகின்றார். பின் உங்கள் இரட்சகன், தான் விரும்பியதைத் தீர்மானிக்கின்றான். வானவர் அதனைப் பதிவு செய்கின்றார்.” (முஸ்லிம்). ஏழவே நாம் அவதானித்த விஞ்ஞான ஆய்வுகளின் படி 42ஆம் நாளில்தான் உடல் அவயங்களும் பாலுறுப்புகளும் ஒன்று சேர்க்கப்படுகின்றன என்பது தெளிவாகிவிட்டது. இந்த நவீன கண்டுபடிப்பையே மேற்படி ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. 42ஆம் நாளில் சிசுவின் உடல் அவயங்கள் ஒன்றுசேர்க்கப்பட்டு அச்சிசு மனிதத் தோற்றத்தைப் பெறும் அதேசமயம்தான் குறித்த வானவர் அச்சிசுவில் ரூஹையும் ஊதி இணைத்துவிடுகின்றார்.
ஆலிப் அலி (இஸ்லாஹியாஹ்)
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science
15 April 2011
சூரியனின் இயக்கம்
பூமியில் உள்ள ஒவ்வொரு அங்கியும் உயிர்வாழ சூரிய ஒளி மிகமிக அவசியம். பக்றீரியாக்கள், பாசித்தாவரங்கள், புற்பூண்டுகள் மகா விருட்சங்கள் என யாவும் சூரிய ஒளியைக்கொண்டே காபனீ ரொட்சைட்டையும் நீரையும் ஒக்ஸிஜனாகவும் உணவாகவும் மாற்றிக் கொள்கின்றன. இதிலிருந்துதான் உலக ஜீவிகளின் உணவுச் சங்கிலியே தொடர்கின்றது. இதுவல்லாமல் சூரியனிலிருந்து இன்னும் பல்வேறுபட்ட பயன்களை நாம் அன்றாடம் பெற்றுக்கொள்கின்றோம். விண்வெளியிலே பில்லியன் கணக்காண நட்சத்திரங்கள் காணப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் அளவிலும் சக்திப் பிறப்பாக்கத்திலும் பிரம்மாண்டமானவை.
ஆலிப் அலி (இஸ்லாஹியாஹ்)உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
விண்ணியல்
07 April 2011
மக்கள் புரட்சியில் facebook, twitter
நாளுக்கு நாள் இணையப் பாவனையாளர்களின் வீதம் துரித கதியில் அதிகரித்துக்கொண்டே பெருகிக்கொண்டே செல்கின்றது. இதனால் பாரியதொரு அறிவியல் புரட்சி உலகளவில் எழுச்சியுற்று வருவதனை தெளிவாகவே அவதானிக்க முடிகின்றது. எந்தவொரு பொதுமகனும் இலகுவழியில் இணைய இணைப்பைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் இன்றளவில் கைவரப் பெற்றுள்ளமையே இதற்குக்காரணம்.
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
உங்கள் கருத்து:
Subscribe to:
Posts (Atom)