நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது
தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்)
பல கோணங்களிலும், (ஏன்) அவர்களுக்குள்ளேயும்
நாம் காண்பிக்கின்றோம். (41:53) வல்லவன் அல்லாஹ்வின் இறுப்பு
சத்தியமானதும் சாத்தியமானதும்தான் என்பதை நாம் ஆராய்ந்து அறிந்துகொள்ளும் வகையில் அல்லாஹ்
அவனது படைப்புகளுடாக பல அத்தாட்சிகளை எமக்குக் காண்பிக்கின்றான். பிரபஞ்சத்தில் மாத்திரமல்ல
ஏன் எமது உடலுக்குள்ளேயே அவன் பல அத்தாட்சிகளை வைத்திருக்கின்றான் என்றே மேலுள்ள வசனத்தின்
இறுதியில் குறிப்பிடுகின்றான். இதனை மற்றுமொரு வசனம் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றது.
“உங்களுக்குள்ளேயும்
(பல) அத்தாட்சிகள் இருக்கின்றன, (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா?” (51:21) இத்தொடரில் எமது உடலில்
பொதிந்திருக்கும் இறை அற்புதங்கள் சிலதை அவதானிப்போம்.
20 December 2014
Subscribe to:
Posts (Atom)