"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

23 June 2012

இப்பிரபஞ்சத்தில் நாம் மட்டும்தான் வாழ்கின்றோமா?

வேற்றுக்கிரகவாசிகள் பற்றி அல்குர்ஆன்.

பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தனியாக இல்லைஎன்ற கருதுகோள்தான் வேற்றுக்கிரக வாசிகள் குறித்து எடுக்கப்பட்டுள்ள அதிகமான திரைப்படங்களுக்குக்கும் புனைக் கதைகளுக்கும் நாவல்களுக்கும் கருவாக அமைந்துள்ளது. வேற்றுக் கிரகங்களிலிருந்து முரட்டுத்தனமான கொடூரமான ஜீவிகள் பூமியை ஆக்கிரமிக்க வருவதுபோன்றும் அதனை எதிர்த்து மனிதர்கள் போராடுவதுபோன்றும் பல்வேறு திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. Avatar, John Carter, Green Lantern, Independence Day, Aliens, Cowboys & Aliens போன்ற திரைப்படங்கள் வேற்றுக் கிரகவாசிகள் பற்றி எடுக்கப்பட்டுள்ள சில திரைப்படங்களாகும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

வேற்றுக்கிரகவாசிகள் பற்றி அல்குர்ஆன்.

பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தனியாக இல்லைஎன்ற கருதுகோள்தான் வேற்றுக்கிரக வாசிகள் குறித்து எடுக்கப்பட்டுள்ள அதிகமான திரைப்படங்களுக்குக்கும் புனைக் கதைகளுக்கும் நாவல்களுக்கும் கருவாக அமைந்துள்ளது. வேற்றுக் கிரகங்களிலிருந்து முரட்டுத்தனமான கொடூரமான ஜீவிகள் பூமியை ஆக்கிரமிக்க வருவதுபோன்றும் அதனை எதிர்த்து மனிதர்கள் போராடுவதுபோன்றும் பல்வேறு திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. Avatar, John Carter, Green Lantern, Independence Day, Aliens, Cowboys & Aliens போன்ற திரைப்படங்கள் வேற்றுக் கிரகவாசிகள் பற்றி எடுக்கப்பட்டுள்ள சில திரைப்படங்களாகும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

14 June 2012

பிறவிக் குருடனும் புத்தரும்

புத்தர் ஒரு மாபெரும் தர்க்க வாதியாக இருந்தார். அவரை தர்க்கத்தில் யாராலும் வெல்ல முடியவில்லை. அதனால் இந்து சாமியார்களால் அவரது கருத்துக்களை பொய் என்று நிரூபிக்க முடியவில்லை. புத்தர் தன் பிரச்சாரத்தை மேற்கொண்ட வழியில் ஒரு கிராமத்தில் ஒரு பிறவிக் குருடன் இருந்தான். அவன் வெளிச்சமே இல்லை என்று வாதம் செய்தான். அவனை அந்த ஊரில் யாராலும் வெல்ல இயலவில்லை. வெளிச்சத்தை என் கையில் கொடுங்கள், அதை நான் சுவைத்துப் பார்க்கிறேன் என்று சொன்னான். இதனால் யாரும் அவனை ஜெயிக்க முடியவில்லை.
ஆலிப் அலி (இஸ்லாஹி) 
புத்தர் ஒரு மாபெரும் தர்க்க வாதியாக இருந்தார். அவரை தர்க்கத்தில் யாராலும் வெல்ல முடியவில்லை. அதனால் இந்து சாமியார்களால் அவரது கருத்துக்களை பொய் என்று நிரூபிக்க முடியவில்லை. புத்தர் தன் பிரச்சாரத்தை மேற்கொண்ட வழியில் ஒரு கிராமத்தில் ஒரு பிறவிக் குருடன் இருந்தான். அவன் வெளிச்சமே இல்லை என்று வாதம் செய்தான். அவனை அந்த ஊரில் யாராலும் வெல்ல இயலவில்லை. வெளிச்சத்தை என் கையில் கொடுங்கள், அதை நான் சுவைத்துப் பார்க்கிறேன் என்று சொன்னான். இதனால் யாரும் அவனை ஜெயிக்க முடியவில்லை.
ஆலிப் அலி (இஸ்லாஹி) 

உங்கள் கருத்து:

08 June 2012

இரத்தம் உறிஞ்சும் நுளம்பு


ஈயைப்போன்றே நுளப்பிற்கும் சிறிது சிறிதாக சுமார் நூறு கண்கள் உள்ளன. இரவில் தனது உணவுத் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள nவிளிக்கிழம்பும் நுளம்புகளுக்கு இக்கண்கள் இருளிலும் பார்வைத் திறனை வழங்குகின்றன. எமது உடலில் இரத்தத்தைப் பம்புவதற்காகத்தான் இதயம் தொழிற்படுகின்றது. இரத்தத்தையே உணவாகக் குடிக்கும் நுளம்புகளுக்கு வௌ;வேறு தொழில்களைச் செய்வதற்காக அச்சிறிய உடம்பிலும் அல்லாஹ் மூன்று இதயங்களை வழங்கியுள்ளான். அவற்றின் வாயில் 48 பற்கள் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இறத்தத்தை உறிஞ்சுவதற்காக அதன் வாய்ப்பகுதியில் நீண்ட ஊசியொன்றும் உள்ளது. எமது உடலில் மயிர் முளைக்கும் இடத்தினூடாகத் தனது ஊசியைச் செலுத்தி இந்நுளம்புகள் இரத்தத்தை உறிஞ்சுகின்றன. சற்றுப் பலமாக உந்தி உடலில் ஊசியைச் செலுத்துவதற்கு அவற்றின் நீண்ட ஆறு கால்களும் உதவுகின்றன.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

ஈயைப்போன்றே நுளப்பிற்கும் சிறிது சிறிதாக சுமார் நூறு கண்கள் உள்ளன. இரவில் தனது உணவுத் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள nவிளிக்கிழம்பும் நுளம்புகளுக்கு இக்கண்கள் இருளிலும் பார்வைத் திறனை வழங்குகின்றன. எமது உடலில் இரத்தத்தைப் பம்புவதற்காகத்தான் இதயம் தொழிற்படுகின்றது. இரத்தத்தையே உணவாகக் குடிக்கும் நுளம்புகளுக்கு வௌ;வேறு தொழில்களைச் செய்வதற்காக அச்சிறிய உடம்பிலும் அல்லாஹ் மூன்று இதயங்களை வழங்கியுள்ளான். அவற்றின் வாயில் 48 பற்கள் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இறத்தத்தை உறிஞ்சுவதற்காக அதன் வாய்ப்பகுதியில் நீண்ட ஊசியொன்றும் உள்ளது. எமது உடலில் மயிர் முளைக்கும் இடத்தினூடாகத் தனது ஊசியைச் செலுத்தி இந்நுளம்புகள் இரத்தத்தை உறிஞ்சுகின்றன. சற்றுப் பலமாக உந்தி உடலில் ஊசியைச் செலுத்துவதற்கு அவற்றின் நீண்ட ஆறு கால்களும் உதவுகின்றன.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

05 June 2012

சூரியனை வெள்ளிக் கிரகம் கடந்து செல்லும் அற்புத நிகழ்வு


சூரியனை வெள்ளிக் கிரகம் கடந்து செல்லும் அற்புத நிகழ்வு நாளை (6ம் திகதி) இடம்பெறவுள்ளது.  105 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் இவ் அற்புத நிகழ்வை யாரும் தவரவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இதுபோன்ற தொரு நிகழ்வை எமது வாழ்நாளில் மீண்டும் ஒரு முறை சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்காது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வெள்ளிக் கிரகம் பயணிக்கும் இக்காட்சியை இலங்கை வாழ் மக்களால் சூரிய உதயம் முதல் காலை பத்து மணிவரை அவதானிக்க முடியும்.  இப்படி வெள்ளி சூரியனை கடக்கும் நிகழ்வு இதுவரை ஏழு முறை மட்டுமே பார்வையிடப்பட்டுள்ளது. (1631, 1639, 1761, 1769, 1874, 1882, 2004 ஆம் ஆண்டுகளில்) நடைபெற்றிருக்கிறது. நாளை நடைபெற இருப்பது எட்டாவது நிகழ்வாகும். இக்காட்சியை யாரும் வெற்றுக் கண்களால் பார்ப்பின் கண்கள் பாதிக்கப்படும். சூரியனின் பிம்பத்தை திரையொன்றில் விழவைத்துப் பார்க்கமுடியும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)



சூரியனை வெள்ளிக் கிரகம் கடந்து செல்லும் அற்புத நிகழ்வு நாளை (6ம் திகதி) இடம்பெறவுள்ளது.  105 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் இவ் அற்புத நிகழ்வை யாரும் தவரவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இதுபோன்ற தொரு நிகழ்வை எமது வாழ்நாளில் மீண்டும் ஒரு முறை சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்காது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வெள்ளிக் கிரகம் பயணிக்கும் இக்காட்சியை இலங்கை வாழ் மக்களால் சூரிய உதயம் முதல் காலை பத்து மணிவரை அவதானிக்க முடியும்.  இப்படி வெள்ளி சூரியனை கடக்கும் நிகழ்வு இதுவரை ஏழு முறை மட்டுமே பார்வையிடப்பட்டுள்ளது. (1631, 1639, 1761, 1769, 1874, 1882, 2004 ஆம் ஆண்டுகளில்) நடைபெற்றிருக்கிறது. நாளை நடைபெற இருப்பது எட்டாவது நிகழ்வாகும். இக்காட்சியை யாரும் வெற்றுக் கண்களால் பார்ப்பின் கண்கள் பாதிக்கப்படும். சூரியனின் பிம்பத்தை திரையொன்றில் விழவைத்துப் பார்க்கமுடியும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)


உங்கள் கருத்து:

இணையத்திற்கு அடிமையாதல் ஒரு பயங்கர உளநோய்


Internet Addiction Disorder

தகவல் பரிமாற்றத்தின் ஜாம்பவானாகத் திகழும் உலகளாவிய வலைப்பின்னல்தான் இணையம். பாவனையாளர்களையும் தகவல்களையும் கணினிகளையும் பிணைத்து இன்றைய தொழில்நுட்ப உலகிலே ஒரு பிரம்மாண்டமான தகவல் புரட்சியை நடாத்தி வருகின்றது. இணையம் எமது அன்றாட வாழ்வின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக மாறியுள்ளது. சிறியோர் முதல் முதியவர்கள் வரை அனைவரது தேவையும் இணையமாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை. நகர்ப்புற மற்றும் படித்த சமூகத்திடம் இத்தேவை வயது வரையறையின்றி சகல மட்டத்திலும் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

Internet Addiction Disorder

தகவல் பரிமாற்றத்தின் ஜாம்பவானாகத் திகழும் உலகளாவிய வலைப்பின்னல்தான் இணையம். பாவனையாளர்களையும் தகவல்களையும் கணினிகளையும் பிணைத்து இன்றைய தொழில்நுட்ப உலகிலே ஒரு பிரம்மாண்டமான தகவல் புரட்சியை நடாத்தி வருகின்றது. இணையம் எமது அன்றாட வாழ்வின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக மாறியுள்ளது. சிறியோர் முதல் முதியவர்கள் வரை அனைவரது தேவையும் இணையமாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை. நகர்ப்புற மற்றும் படித்த சமூகத்திடம் இத்தேவை வயது வரையறையின்றி சகல மட்டத்திலும் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...