புவிவெப்பமடைதலைத் தடுக்க செய்யவேண்டியதெல்லாம் ஒன்;று காபனீரொட்சைட் வெளியிடப்படுவதைக் குறைக்கவேண்டும். அதற்கு காபனை வெளியிடும் தொழிற்சாலைகள், வாகனங்கள் முதலியவற்றின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும். இது உண்மையில் அசாத்தியமானவொன்று. இது ஒரு நாட்டின் வளர்ச்சியைக் குன்றச் செய்யும் என்பதால் எந்த நாடும் தமது உற்பத்தியைக் குறைப்பதில் உடன்படுவதில்லை. இரண்டாவது வழிமண்டலத்தில் காபன் வெளியிடப்படும் விகிதாசாரத்தை ஒவ்வொரு நாடும் குறைத்துக்கொள்ளவேண்டும். இதுவும் தமது பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்பதால் வளர்முக நாடுகள் இதற்கும் ஒத்துக்கொள்வில்லை. இவ்வாறு செய்தால்கூட வருடத்திற்கு 1 டிரில்லியன் டொலர்கள் நட்டம் ஏற்படும். இந்த இரண்டு வழிமுறைகளும் தமக்குப் பாதகமாக உள்ள காரணத்தினால்தான் மேற்கூறிய மாநாடுகளும் உடன்படிக்கைகளும்கூட தோல்வியில் முடிவடைந்தன. எனவே யாருக்கும் பிரச்சினையில்லாத மூன்றாவது ஒரு வழிமுறை பற்றி சிந்திப்பதன்பால் கவனம்குவிக்கப்படட்டது. அதன் விளைவுதான் புவிப்பொறியியல் என்ற புதியதொரு வழிமுறை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...