"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

27 November 2009

உலகை உலுக்கி வரும் பட்டினிச்சாவு


“பட்டினிச்சாவு” இன்றைய பெரும் பிரச்சினையாக காட்டுத்தீபோல் உலகம் பூராவும் பரவிவருகின்றது. யுத்தமென்றும், ஆட்கொல்லிநோய்களென்றும் பல்வகை சவால்களையும் எதிர்கொண்டு வரும் மனிதன் இன்றைய தினம் பெரும் உணவுப்பஞ்சத்திற்கும் முகம்கொடுக்க நேர்ந்துள்ளான். இன்று பல்வேறு உலக நாடுகள் இப்பிரச்சினையில் சிக்கி வெளியேற முடியாது தவித்துக்கொண்டிருக்கின்றன. இதனால் பல்வேறு உயிரிழப்புக்களும், கோளாருகளும் தினந்தோரும் ஆங்காங்கு நிகழ்ந்தவண்ணமிருக்கின்றன. உலகத்தரவுகளை வைத்து நோக்கும் போது இந்தப்பட்டினிச்சாவு அநியாயமானது. தமது சுயத்தின் மீது பேராசை கொண்ட சிறு தொகை மக்கள் கூடுதல் இலாபமீட்டவும் தம் நலன் காக்கவுமாக பெருந்தொகை மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் இடையூறுகளை ஏற்படுத்தி சுகபோகத்தில் திலைத்துக் கொண்டிருக்கின்றனர். அண்மைக் காலங்களில் இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கைகள் இதனை அம்பலப்படுத்தியுள்ளன.

பல நாடுகள் எதிர்கொண்டு வரும் உணவுப்பற்றாக்குறை, கிடைக்கும் கொஞ்ச உணவிலும் ஊட்டச்சத்துக்குறைபாடு, அதனாலான நோய்கள் என்பவற்றின் காரணமாக நாளொன்றுக்கு 16000 குழந்தைகள் இறக்கநேரிடுகின்றன.

எங்கள் தேசம் பத்திரிகையில் பிரசுரமாகியது
ஆலிப் அலி (இஸ்லாஹி)

“பட்டினிச்சாவு” இன்றைய பெரும் பிரச்சினையாக காட்டுத்தீபோல் உலகம் பூராவும் பரவிவருகின்றது. யுத்தமென்றும், ஆட்கொல்லிநோய்களென்றும் பல்வகை சவால்களையும் எதிர்கொண்டு வரும் மனிதன் இன்றைய தினம் பெரும் உணவுப்பஞ்சத்திற்கும் முகம்கொடுக்க நேர்ந்துள்ளான். இன்று பல்வேறு உலக நாடுகள் இப்பிரச்சினையில் சிக்கி வெளியேற முடியாது தவித்துக்கொண்டிருக்கின்றன. இதனால் பல்வேறு உயிரிழப்புக்களும், கோளாருகளும் தினந்தோரும் ஆங்காங்கு நிகழ்ந்தவண்ணமிருக்கின்றன. உலகத்தரவுகளை வைத்து நோக்கும் போது இந்தப்பட்டினிச்சாவு அநியாயமானது. தமது சுயத்தின் மீது பேராசை கொண்ட சிறு தொகை மக்கள் கூடுதல் இலாபமீட்டவும் தம் நலன் காக்கவுமாக பெருந்தொகை மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் இடையூறுகளை ஏற்படுத்தி சுகபோகத்தில் திலைத்துக் கொண்டிருக்கின்றனர். அண்மைக் காலங்களில் இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கைகள் இதனை அம்பலப்படுத்தியுள்ளன.

பல நாடுகள் எதிர்கொண்டு வரும் உணவுப்பற்றாக்குறை, கிடைக்கும் கொஞ்ச உணவிலும் ஊட்டச்சத்துக்குறைபாடு, அதனாலான நோய்கள் என்பவற்றின் காரணமாக நாளொன்றுக்கு 16000 குழந்தைகள் இறக்கநேரிடுகின்றன.

எங்கள் தேசம் பத்திரிகையில் பிரசுரமாகியது
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

13 November 2009

தொலைக்காட்சி விளம்பரங்களில் பெண்கள் - ஒரு நோக்கு.


ஊடகங்களின் தனிநிகர் வடிவம் தொலைக்காட்சி என்பது இலங்கைவாழ் மக்களில் பெரும்பாலானோரின் கருதலாகும். இன்று இலங்கையில் மாத்திரம் ஏகப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் இயங்கிவருகின்றன. அலைவரிசைகளில் கூடுதலாக இடம்பிடித்திருப்பவை விளம்பரங்களாகும். விளம்பரங்களில் அதிகமானவை பெண்களைக் காட்சிப்படுத்தியே கட்டமைக்கப்படுகின்றன என்பதை ஒருக்காலும் மறுதலிக்க முடியாது. அந்தவகையில் தொலைக்காட்சி விளம்பரங்களில் பெண்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறார்கள் என்றும், அவ்விளம்பரங்களைப் பார்ப்பவர்களின் மனோபாவத்தில் அவை எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றும் ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தொலைக்காட்சி அலைவரிசைகள் விளம்பரத்திற்கு கூடுதல் முன்னுரிமையளிக்கின்றன. விளம்பரம் உற்பத்தியாளர்களின் சந்தைப்படுத்தலுக்கான ஓர் ஊடகமாகவும் அலைவரிசை நிறுவனங்களுக்கான சம்பாத்தியமாகவும் விளங்குகிறது. ஒரு நிகழ்ச்சியினிடையே எத்தனை விளம்பரங்கள் காட்டப்படுகின்றன எனக் கணக்கிட்டால் அதற்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை விளங்கலாம்.

.....ஆலிப் அலி.....

ஊடகங்களின் தனிநிகர் வடிவம் தொலைக்காட்சி என்பது இலங்கைவாழ் மக்களில் பெரும்பாலானோரின் கருதலாகும். இன்று இலங்கையில் மாத்திரம் ஏகப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் இயங்கிவருகின்றன. அலைவரிசைகளில் கூடுதலாக இடம்பிடித்திருப்பவை விளம்பரங்களாகும். விளம்பரங்களில் அதிகமானவை பெண்களைக் காட்சிப்படுத்தியே கட்டமைக்கப்படுகின்றன என்பதை ஒருக்காலும் மறுதலிக்க முடியாது. அந்தவகையில் தொலைக்காட்சி விளம்பரங்களில் பெண்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறார்கள் என்றும், அவ்விளம்பரங்களைப் பார்ப்பவர்களின் மனோபாவத்தில் அவை எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றும் ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தொலைக்காட்சி அலைவரிசைகள் விளம்பரத்திற்கு கூடுதல் முன்னுரிமையளிக்கின்றன. விளம்பரம் உற்பத்தியாளர்களின் சந்தைப்படுத்தலுக்கான ஓர் ஊடகமாகவும் அலைவரிசை நிறுவனங்களுக்கான சம்பாத்தியமாகவும் விளங்குகிறது. ஒரு நிகழ்ச்சியினிடையே எத்தனை விளம்பரங்கள் காட்டப்படுகின்றன எனக் கணக்கிட்டால் அதற்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை விளங்கலாம்.

.....ஆலிப் அலி.....

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...