கடந்த வருடம் (2011) கூகுல் இணைய தளத்தினூடாக ஆபாசக் காட்சிகளை ஒன்லைனில் அதிகம்
தரிசிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது. குகூல் இதுதொடர்பாக
ஆசிய நாடுகளின் விவரத்தை வெளியிட்டதிலிருந்தே இது தெரியவந்துள்ளது. இதிலும் முதல்
10 நகர வரிசையில் இந்தியாவின் 7 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. லக்னோ 2ஆவது இடத்தையும்,
கல்கத்தா 3ஆவது இடத்தையும் பூனே 5ஆவது இடத்தையும் புதுடில்லி 6வது இடத்தையும் பெங்களுர்
7வது இடத்தையும் அதேநேரம் சென்னை 8வது இடத்தையும் மும்பை 9வது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்திய நகரங்களல்லாத நகரங்களில் கொழும்பு முதலிடத்தைப் பிடித்துள்ளது. பாகிஸ்தானின்
லாகூர் 4ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
Goliath Bird Eating Spider என்ற
சிலந்திவகையே உலகிலேயே பெரியதும் பாரம் கூடியதுமான சிலந்திகளாகக் கருதப்படுகின்றன.
இதன் விஞ்ஞானப் பெயர் Theraphos Blobdi என்பதாகும். அது ஆறு அவுன்ஸ் நிறையைக்கொண்டுள்ளதோடு
அதன் கால்களை நன்கு விரித்தால் 30 செ.மீ. வரை நீளமாகவும் இருக்கும். இணப்பெருக்கத்திற்காக
ஆண் மற்றும் பெண் சிலந்திகள் இணைந்த பின்னர் ஆண் சிலந்தியை பெண் சிலந்தி இரையாக உட்கொண்டுவிடுகிறது.
இவை பறவைகளையும் தவளைகளையும் கூட உணவாகக்கொள்ளும் பயங்காரமானவை என விஞ்ஞானிகள் அறிவிக்கின்றனர்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
இத்தாவரம் பிலிப்பைன்ஸ் நாட்டில் மவுன் விக்டோரியா
எனும் மலைப்பிரதேசத்தில் தாவரவியலாளர்கள் Stewart
McPherson , Alastair Robinson ஆகியோரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது மாமிசம் உண்ணும் தாவரங்களிலேயே மிகப்பெரியது
எனக்கருதப்படுகின்றது.இத்தாவரம் தன்னகத்தே மாமிசங்களை
கரைக்க்க்கூடிய அமிலம்போன்ற நொதியன்களைக் கொண்டுள்ளது. இது எலிகள், பூச்சிகள், ஊர்வன
என்பவற்றை பிடிப்பதற்கு ஏதுவாக விசேட அமைப்பைக்கொண்டுள்ளது.
இவ்வகைத்தாவரங்கள் உயிரின்ங்கள் கரையும்போது அவற்றை
அகத்துரிஞ்சுகின்றன. ஈமெயிலில் கிடைத்த தகவல்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
சுமார் 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு
முன்பு நிகழ்ந்த பெருவெடிப்பின் வழியாக இப்பேரண்டம் உருவானது. அதன்பின் அண்டத்தில்
காணப்பட்ட நுண் துகள்கள் ஒன்றுசேர்ந்தே அணுக்களும் கோள்களும் நட்சத்திரங்களும் உருவாகின
என்பது விஞ்ஞானிகளின் கூற்று. எவ்வாறு இம் மூலக்கூறுகள் இணைந்து துல்லியமான வடிவமைப்புக்கள்
உருவாகின அல்லது சந்திரன்,
பூமி, சூரியன், நட்சத்திரங்கள், கெலக்ஸிகள், கருந்துளைகள், விண்
பொருட்கள், இன்னும் என்னென்னவோ மர்மங்கள் இவற்றையெல்லாம் உள்ளடக்கி இயங்கும் இப்பிரபஞ்சத்தை உருவாக்கியது யார்? எப்போது? எப்படி? என்பதுதான்
பல்லாண்டுகாலமாக விஞ்ஞானிகளையும் பொதுமக்களையும் குழப்பிக்கொண்டிருந்த கேள்வி.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
அண்மைக்காலமாக இலங்கையில் சிறுவர்
துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த நான்கு மாதங்களுக்குள் மாத்திரம் 744
சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அண்மைய கணிப்பீடொன்று சுட்டுகின்றது.
அதிகமாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருப்பவர்கள் கிராமப்புற சிறுவர்களெனவும் தெரியவந்துள்ளது.
குடும்பத்தவர்கள், அயலவர்கள், ஆசிரியர்கள் என மிகவும் நெருங்கியவர்களாலே அதிகமான சிறுவர்கள்
துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர் என சட்டமா அதிபர் திணைக்களப் பிரதி சொலிசிடர் ஜெனரல்
சரத் ஜயமன்ன தெரிவித்துள்ளார். சிறுவர்கள் விடயத்தில் சமூகம் விழிப்புடன் இருக்கவேண்டும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து: