அன்றைய விஞ்ஞானிகளுக்கும் கிறிஸ்தவத் திருச் சபைக்குமிடையே ஏற்பட்ட உண்மைக்கும் வரட்டு கௌரவத்திற்கும் இடையிலான முரண்பாடாகும். பல விஞ்ஞானிகள் தீயிட்டுக்கொழுத்தப்பட்டதும் சிறையிலடைக்கப்பட்டதும் வரலாறு கூறும் உண்மைகள். இது அம்மக்களின் மனதில் மதம் பற்றிய சகப்புணர்வை ஏற்படுத்தியது. மதத்தை விட்டொழித்தால் மட்டுமே வாழ்வில் முன்னேர முடியும். இல்லாவிடின் நாம் காலாகாலமாக மதத்தின் பெயரால் கொடுமைப்படுத்தப்படுவோம். இவ்வாறான சிந்தனைகள் எழவே மதம் என்பது பொய், அது அபினைப் போன்றது. கடவுள் என்றொன்றில்லை. அனைத்தும் இயற்கையான தற்செயல் விபத்தின் மூலம் உருவானவையே என்று சிலர் கருத்து முன்வைத்து அதனை நிரூபனம் செய்ய பகுத்தறிவு ரீதியான பல ஆதாரங்களையும் திரட்டினர். இனால் கவரப்பட்ட மக்கள் இக்கொள்கைகளை ஆதரித்து அதில் இணைந்து கொண்டனர்.
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)

உங்கள் கருத்து:
இவ்வாறு அல்லாஹ் அண்டவெளியிலே இன்னோரன்ன பல அத்தாட்சிகளையும் அற்புதங்களையும் வைத்திருக்கின்றான். அதனை இன்றைய அறிவியல் உலகம் பலவாறு ஆராய்ந்து வருகின்றது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா என பல்வேறு நாடுகளும் இந்த விண்வெளி ஆராய்ச்சியில் களமிறங்கி பல மில்லியன் கணக்கான டொலர்களைச் செலவுசெய்து பல செய்மதிகளை விண்ணுக்கு ஏவி NASA போன்ற ஆராய்ச்சி நிறுவனங்களையெல்லாம் நிறுவியும் ஏன் இன்னும் இறை வல்லமையை இவர்களால் உணர்ந்து ஈமான் கொள்ள முடியவில்லை? அவ்வாறு அவர்கள் ஈமான் கொள்ளாததற்கான காரணத்தை இங்கு அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.
ஆலிப் அலி (இஸ்லாஹியாஹ் வளாகம்)
உங்கள் கருத்து:
ஜிஹாத் என்ற சொல்லைக் கேட்டதுமே பலரும் உசாராகி விடுகின்றார்கள். ஏனெனில் இன்று இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள், இஸ்லாத்தின் குறகிய கால வளர்ச்சியை சீரனிக்க முடியாதவர்கள் இந்த ஜிஹாத் எனும் யுத்தத்தினூடாகவே இஸ்லாம் பரப்பப்பட்டது என்றும் வெற்றிகொள்ளப்பட்ட மக்கள் வாள் முனையில் காட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர் என்றும் பிரச்சாரம் செய்கின்றனர். லியோனி கைட்டான், கோல்ட்ஸியர், பண்டலி ஜோஸி, எம்.கியோஜி மற்றும் பெர்னார்ட் லுயிஸ் போன்ற சில அறிஞர்களும் வரலாற்றாசிரியர்களும் இஸ்லாம் வாள்முனையில் பரப்பப்பட்ட மார்க்கம் என்று குற்றக் கணைகளைத் தொடுக்கின்றனர்.
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
உங்கள் கருத்து:
அல்லாஹ் தனது திருமறையிலே இரும்பைப் பற்றி பின்வருமாறு கூறுகின்றான். “இன்னும் இரும்பையும் நாமே இறக்கினோம். அதில் கடுமையான சக்தியும் மனிதர்களுக்குப் பயன்களும் இருக்கின்றன.” (அல்ஹதீத்:25)
அல்லாஹ் இவ்வசனத்தில் இரண்டு விடயங்களை முக்கியப்படுத்திக் குறித்துக்காட்டுகின்றான். ஒன்று; இரும்பை நாமே இறக்கினோம், இரண்டு; மனிதர்களுக்கு அதில் பயன்களும் இருக்கின்றன. இவ்விரு விடயங்களையும் விளக்கமாகப் பார்ப்பதனூடாக இரும்பைப் பற்றிய ஆச்சரியமான சில விடயங்களையும் இறைவனின் வல்லமைகளையும் விளங்கிக்கொள்ள முடியும். அவற்றை சற்று விளக்கமாகப் பாப்போம்.
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
உங்கள் கருத்து:
“இஸ்லாம் பெண்களுக்கு உரிமைகளை வழங்குவதில் பக்க சார்புடன் நடந்துகொள்கின்றது அல்லது உரிமைகளை வழங்குவதில்லை” என விமர்சனம் செய்யும் பலரும் முன்வைக்கும் ஒரு கேள்விதான் “ஏக காலத்தில் ஆண்கள் நான்கு பெண்களைத் திருமணம் முடிக்க இயலுமாயின் ஏன் அவ்வுரிமையைப் பெண்களுக்கு வழங்குவதில்லை?” என்பது. இக்கேள்விக்கான யதார்த்தபூர்வமான பதிலை இஸ்லாமிய மார்க்க அறிஞர் இமாம் அபூ ஹனீபா அவர்களது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்திலிருந்து விளங்கிக்கொள்ளலாம். ஒரு தடவ
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
உங்கள் கருத்து: