அல்லாஹ்வின்
படைப்புகள் அனைத்திலும் மனிதனுக்கு ஏராளமான படிப்பினைகள் காணப்படுகின்றன. அப்படைப்புகளிலிருந்து
கால்நடைகளைக் குறிப்பாக்கி அவற்றிலும் படிப்பினைகள்,
அத்தாட்சிகள் உள்ளன என்பதைத்தான் மேலே உள்ள திருமறை
வசனம் குறிப்பிடுகின்றது. இங்கு கால்நடைகள் எனும்போது அதில் குறிப்பாக ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற விலங்குகள்
உள்ளடங்குகின்றன. இத்தொடரில் பசு மாட்டில் இறைவன்
வைத்திருக்கும் அற்புதங்களையும் அதிலிருந்து நாம் எடுத்துக்கொள்கின்ற
படிப்பினைகளையும் பயன்களையும் பார்ப்போம்.
17 January 2016
பால் தரும் பசுக்கள்
Labels:
ISLAM - Science,
படைப்பினங்கள்
08 December 2015
மீண்டும் இந்தியாவில் குண்டு வெடிக்கலாம்?
இன்று உலக ஊடகங்களின் பரவலான பேசுபொருள் சென்னை நகரை மழை வெள்ளம்
மூழ்கடித்தபோது இந்திய முஸ்லிம்கள் தமது இந்துச் சகோதரர்களுக்கு செய்த நிவாரணப் பணி
குறித்ததுதான். வழமையாக இந்தியாவில் டிசம்பர் 6 என்றால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கெதிரான
ஆர்ப்பாட்டங்கள் கொடிகட்டும். ஆனால் அதே இந்த டிசம்பர் 6 முஸ்லிம் இந்து சகோதரர்களுக்கிடையிலான
நட்புறவு மலரக் காரணமாகியுள்ளது.
உங்கள் கருத்து:
Labels:
அரசியல்,
சிந்தனைக்கு
01 December 2015
ஆழ்கடல் முதல் அர்ஷ் வரை
கடலின் மேல் மட்டத்திலிருந்து
40 மீட்டர் தூரம் வரைதான்
திறமைவாய்ந்த நீச்சல் வீரர்கள்கூட பாதுகாப்பான நீச்சல் உடைகளுடன் ஒக்சிஜன் சிலின்டர்களையெல்லாம்
சுமந்துகொண்டு மூழ்குவார்கள். இதற்கு அப்பால் நீச்சல் உடையுடன் நீந்திச் செல்வது உயிராபத்தை
ஏற்படுத்தும். எனவே ஒரு நீர் மூழ்கியின் உதவியுடன்தான் செல்லவேண்டும். கடலின் மேல்
மட்டத்திலிருந்து 301 மீட்டர் ஆழம்வரை
சென்றால் இது பிரான்ஸில் உள்ள உலகப் பிரபல்யம்வாய்ந்த ஈபில் கோபுரத்தின் (Eiffel tower) உயரத்திற்கு நிகரான
ஆழமாகும். இன்னும் கீழே 500 மீட்டர் ஆழம் வரையான
பகுதியில்தான் நீளத் திமிங்கிளங்கள் சஞ்சரிக்கின்றன. இதற்கு அப்பால் இவற்றால்கூட செல்லமுடியாது.
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
படைப்பினங்கள்
08 November 2015
சமாதானப் பறவை புறா
எனது வீட்டில் இரண்டு மணிப் புறாக்களும் ஆறு மாடப்புறாக்களும்
இருக்கின்றன. அவற்றை ஆசையாக வளர்த்துவருகின்றேன். புறா
வளர்ப்பின்போது அவற்றில் பல்வேறு அற்புதங்களைக் கண்டு நான் மெய்சிலிர்த்த
சந்தர்ப்பங்கள் பல உண்டு. இத்தொடரில் அவற்றை உங்களுடன்
பரிமாறிக்கொள்ள நினைக்கின்றேன். புறா முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்தது. உயிரின வகைப்பாட்டில் இது கொலம்பிடே (Columbidae) குடும்பத்தைச் சேர்ந்தது.
புறாக்களை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று மணிப்புறா (Dove),
மற்றையது மாடப்புறா (Pigeon). உருவத்தில்
சிறிதாக இருப்பது மணிப்புறா. காட்டுப் புறா என்றும் சொல்லலாம். இவற்றை அடைத்து வளர்ப்பது சிறமம். பழக்கப்படுத்திக்கொள்வதும்
கடினம். உருவத்தில் பெரிதாக இருப்பது மாடப்புறா. இதனை வீட்டுப் புறா என்று சொல்லலாம். இவ்வகைப்
புறாக்களை வீட்டில் வளர்ப்பதும் பழக்கப்படுத்திக்கொள்வதும் மிக மிக சுலபம்.
இவ்விரண்டும் அல்லாமல் புறாக்களின் குடும்பத்தில் அழகழகான, வித்தியாசமான வடிவங்களில் சுமார் 310 வகை இனங்கள் உள்ளன. அனைத்துப் புறாக்களும் உலகின் பனி, பாலைவனப் பிரதேசங்கள் தவிர்ந்த மற்ற எல்லா இடங்களிலும் வாழ்கின்றன.
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
படைப்பினங்கள்
29 October 2015
ஆணும் பெண்ணும் சமமானவர்களல்லர் – ஒரு உளவியல் பார்வை
ஆணையும் பெண்ணையும் படைத்த அல்லாஹ் திருமறையில் ஆணும் பெண்ணும்
சரி சமமானவர்கள் அல்லர் என்று கூறுகின்றான். இந்த வசனம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில்
இருக்கும் அடிப்படை வித்தியாசங்களைக் வேறுபிரித்துக் காட்ட விளைகின்றது. அத்தோடு இந்த
வித்தியாசத் தன்மைதான் இருவரும் சேர்ந்து வாழ வழியமைக்கின்றது. ஆண் பெண்ணின் மீதும்
பெண் ஆணின் மீதும் தேவையுடையவர்கள் என்பதை உண்ர்த்துகின்றது. ஆணோ, பெண்ணோ இருவரும் அரைகுறையானவர்கள். இருவரும் இணையும்போதுதான் அங்கு பூரணத்துவம்
ஏற்படுகின்றது. திருமண வாழ்க்கையில் இந்த ஆண் பெண் வித்தியாசத்தை விளங்கியிருக்கும்போது
பிரச்சினைகள் ஏற்படுவது மிகவும் குறைவு.
உங்கள் கருத்து:
Labels:
உளவியல்
Subscribe to:
Posts (Atom)