“இந்த நாடு நமக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு
அருவிகளிலும், ஆறுகளிலும், ஓடும்
ஒளிர்விடும் நீர் வெறுமனே நீர் அன்று. இது எம் முன்னோரின் இரத்தம், அவை
புனிதமானது என்பதை நினைவு கூர வேண்டும். எமது பிள்ளைகளுக்கும் அவற்றின் புனிதத்
தன்மையையிட்டு அறிவுறுத்த வேண்டும்.” (செவ்விந்தியத் தலைவர் Siyattle)
ஐரோப்பியர்கள் படையெடுத்துவந்து அமெரிக்காவின் காடுகளையும் நீர் நிலைகளையும்
அருவிகளையும் ஆறுகளையும் துவம்சம் செய்தபோது செவ்விந்தியர்களின் தலைவர் Siyattle படைத்தளபதிக்கு எழுதிய
கடித்த்தில் நீரின் பெறுமதியை அழக்காக் குறித்துக்காட்டியுள்ளார். தொழில்
புரட்சியின் பின் உலக நாடுகள் நீரை மாசுபடுத்தும் பணிகளில் ஈடுபட்டதைத்
தடுப்பதற்காகவும் நீரின் பெறுமதியை உணர்ந்த்தன் விளைவாகவும் பிரேசில் நாட்டின் ரியோ
டி ஜெனீரோ நகரில் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற சுற்றாடல் மற்றும்
அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகள் மகாநாட்டில் (United Nations Conference on
Environment and Development (UNCED) 21ம் நூற்றாண்டுக்கா முன்வைக்கப்பட்ட செயல்திட்டத்தின்படி மார்ச்
22 ஆம் திகதியை
உலக நீர் தினமாக (World water Day)) ஐ.நா.பொதுச் சபை பிரகடனம்
செய்தது.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...