குறித்ததொரு கடையில் வாடிக்கையாளர்கள் வரிசையில் பொருட்களை வாங்குவதற்காக வரிசையில் வந்துகொண்டிருந்தனர். இடையே வந்த செல்வந்தர் ஒருவர் வரிசையை உடைத்துக்கொண்டு நுழைய முயன்றார். மற்றவர்கள் அதனைத் தடுத்ததும் ஆவேசமாக “நான் யார் தெரியுமா?” என்று அதட்டிக்கேட்டார். கடை ஊழியர் பணிவாய்ப் பேசி அவரை நகர்த்த முயன்றார். மீண்டும் “நான் யார் தெரியுமா?” என்று உறுமினார். மேலாளர் வந்து வரிசையில் வரப்பணித்தும் “நான் யார் தெரியுமா?” என்று திருப்பிக் கூற…
மேலாளர் அலுவலக ஒலிபெருக்கியில் அறிவித்தார். “தான் யார் என்பது தெரியாமல் ஒரு மனிதர் எதிரே வருபவர்களிடமெல்லாம் அதுபற்றிக் கேட்கின்றார். அறிந்தவர் யாராவது இருந்தால் அவலை அடையாளம் காண உதவுங்கள்” என்றார். உண்மையில் தன்னை மறப்பதே தலைக்கனத்தின் அடையாளமாகும்.
நன்றி : மீள்பார்வை.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...