விளையாட்டுத் தொலைபேசியில் ஒரு பெண் குழந்தை தன் தோழியுடன் கற்பனையில் பேசிக் கொண்டிருந்தது. அப்போது மடியில் இருந்த பொம்மையைச் சுட்டிக்காட்டி “இவளை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்றே தெரியவில்லை? அடங்கவே மாட்டேன்குறாள், சமாளிக்கவே முடியவில்லை” என்கிறாள் குழந்தை. இதனை செவியுற்ற குழந்தையின் தாய் அதிர்ச்சியடைந்துவிட்டாள். தன் சிநேகிதியுடன் பேசிய விடயம் குழந்தையின் மனதில் இப்படியொரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை உணர்ந்துகொண்டாள். குழந்தைகள் பற்றிய நமது விமர்சனங்கள் அவர்களைச் சோர்வடையச் செய்கின்றன. குழந்தைகளோடு பேசும்போதும் அவர்களைப் பற்றிப் பிறரிடம் உரையாடும்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...