அந்தத் தெருவில் இரண்டு குதிரைகள எப்போதும் இணைந்தே வலம் வந்தன. பார்ப்பதற்கு இரண்டும் ஒன்று போல் தெரியும். நெருங்கிப் பார்த்தால் ஓர் உண்மை புரியும். இரண்டு குதிரைகளில் ஒன்றுக்குக் கண் தெரியாது. கண்தெரியாத குதிரையை அதன் உரிமையாளர் கட்டிப்போடவில்லை. இன்னொரு குதிரையுடன் மேயவிட்டார்.
ஆனால், மிக வித்தியாசமான அபூர்வமான ஒரு விடயத்தையும் அவர் செய்தார். கண்தெரியாத குதிரையின் கழுத்தில் சிறிய மணி ஒன்றைக் கட்டியிருந்தார். மணியோசை கேட்டு ஊனமுற்ற குதிரை, அடுத்ததைத் தொடர்ந்து வலம்வரும். அந்த உரிமையாளர் செய்ததைத்தான் இறைவனும் செய்கின்றான். ஒவ்வொரு குறைபாட்டுக்கும் மாற்று ஏற்பாட்டை செய்துவைத்துள்ளான். நன்றி : மீள்பார்வை.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...