தற்போது இலங்கை புராகவும் கிறீஸ் மர்ம மனிதன் பற்றிய அச்சம் மக்கள் மத்தியில் குடிகொண்டுள்ளது. இரவு நேரங்களில் உடல் புராகவும் கறீஸ் தடவிக்கொண்டு வீடுகளை நோக்கி இவர்கள் வருவதாகவும் வீட்டில் உள்ளவர்களைக் குழப்பிவிட்டு ஓடிவிடுவதாகவும் பல்வேறு செய்திகள் நாட்டின் நாளா புறமிருந்தும் வந்துகொண்டிருக்கின்றது. இச்செய்தியைத் தட்டச்சு செய்துகொண்டிருக்கும் இவ்வேளையிலும் கூட கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் கிறீஸ் மனிதன் சம்பவம் நிகழ்ந்ததாக தொலைபேசி வாயிலாக ஒரு நண்பர் தெரிவித்தார். கண்டி, கம்பளை, அனுராதபுரம், பொலன்னறுவை, குருநேகலை, புத்தளம், அக்கரைப்பற்று, ஓட்டமாவடி என பல பிரதேசங்களிலும் இந்த விவகாரம் தலைக்குமேல் போய்க்கொண்டிருக்கின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...