நான்கு வகை மனிதர்கள்.
கலீல் இப்னு அஹ்மத் (ரஹ்) அவர்களிடம் ஒரு மனிதர், மனிதர்களின் வகை குறித்துக் கேட்டார். அதற்கவர், “மனிதர்கள் நான்கு வகைப்படுகின்றனர் அவர்கள்
1. அறிவுள்ளவர் : தான் அறிவுள்ளவர் என்பதை அறிந்தவர். இவரிடம் நீங்கள் பலதையும் கற்றுக்கொள்ளுங்கள்.
2. அறிவுள்ளவர் : தான் அறிவுள்ளவர் என்பதை அறியாதவர். இவர் மறதியிலிருக்கிறார். இவருக்கு நினைவூட்டுங்கள்.
3. அறிவற்றவர் : தான் அறிவற்றவர் என்பதை அறிந்தவர். இவர் வழிகாட்டுதலை வேண்டி நிற்கிறார். எனவே இவருக்குக் கற்றுக்கொடுங்கள்.
4. அறிவற்றவர் : தான் அறிவற்றவர் என்பதை அறியாதவர். முட்டாள். நிராகரித்துவிடுங்கள் என்று விளக்கிக் கூறினார்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...