அன்பர்களே! நாம் தற்போது புனித ஷஃபான் மாதத்தை அடைந்திருக்கின்றோம். இஸ்லாத்தின் புனிதமான மாதங்களில் இதுவும் ஒன்று. நபி (ஸல்) அவர்களது வழிகாட்டுதல்களுக்கிணங்க நாம் இம்மாதத்தை நோன்பு பிடிப்பதில் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும். பின்வரக்கூடிய ஹதீஸை சற்று அவதானியுங்கள்.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் ரஸுல் (ஸல்) அவர்கள் ஷஃபானைவிட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்கவில்லை. அவர்கள் ஷஃபான் முழுவதுமே நோன்பு நோற்பவராக இருந்தார்கள். மற்றுமோர் அறிவிப்பில் ஷஃபான் மாதத்தில் அதிகமான நாட்களில் நோன்பு நோற்பார்கள் என்றும் வந்துள்ளது. (புஹாரி, முஸ்லிம்)
எனவே நாம் அடுத்து வருகின்ற ரமழானிற்குத் தயாராகும் விதமாகவும் இம்மாதத்திலே அதிக நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் அதிகமதிகம் நோன்பு பிடிப்போம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...