முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷயின் நடவடிக்கைகளை
நோக்கும் போது தெற்கில் அவரது அதிகாரத்தை இஸ்திரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில்
இரங்கியுள்ளார் போன்று தெரிகின்றது. தெற்கு
மக்களின் நல்லபிப்பிராயத்தையும் அனுதாபத்தையும் பெற்றுக்கொள்ளும் முயற்சிகள்
நடைபெறுகின்றன. தனது பதவிக்காலத்து தவறுகளை ஏற்றுக்கொள்வதாகவும் அவற்றுக்கு மக்கள்
முன் மன்னிப்புக் கோருவதாகவும் வசனம் பேசுகின்றார். தற்போதுள்ள
நல்லாட்சியை தெற்கு மக்களிடம் விமர்சித்தும் தூசித்தும் பேசிய பல காட்சிகள்
ஊடகங்கள் வாயிலாகவும் காணக்கிடைத்தது. மூன்று தடவைகள் தற்போதைய ஜனாதிபதி மைத்திரி
பால அவர்களைக் கொலைசெய்யும் முயற்சிகளும் நடைபெற்றுள்ளன. எதற்கும் அரசாங்கம்
விழிப்புடன் இருக்கவேண்டும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...