நோன்பு மாதம் வந்துவிட்டால் எம்மில் அநேகர் இரவைப் பகலாகவும் பகலை இரவாகவும் மாற்றிக் கொள்வதைக் காண்கின்றோம். அதிகாலையில் சஹர் செய்துவிட்டு எந்தவித இபாதத்களிலும் ஈடுபடாமல் நோன்பு திறக்கும் நேரம் வரை தூங்குபவர்களும் இருக்கின்றனர். பின்பு இரவு நேரங்களில் பாதைகளில் சுற்றித் திரிந்து வீண் கேலிக்கைகளில் ஈடுபடுகின்றனர். உண்மையில் நோன்பு மாதம் என்பது சோம்பேரிகளை உருவாக்குமொரு மாதமல்ல. மாறாக அது சிறந்த பண்பாடுடையவர்களையும் ஆளுமை உடையவர்களையும் வீரமிக்கவர்களையும் உருவாக்கும் மாதம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...