"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

27 November 2009

உலகை உலுக்கி வரும் பட்டினிச்சாவு


“பட்டினிச்சாவு” இன்றைய பெரும் பிரச்சினையாக காட்டுத்தீபோல் உலகம் பூராவும் பரவிவருகின்றது. யுத்தமென்றும், ஆட்கொல்லிநோய்களென்றும் பல்வகை சவால்களையும் எதிர்கொண்டு வரும் மனிதன் இன்றைய தினம் பெரும் உணவுப்பஞ்சத்திற்கும் முகம்கொடுக்க நேர்ந்துள்ளான். இன்று பல்வேறு உலக நாடுகள் இப்பிரச்சினையில் சிக்கி வெளியேற முடியாது தவித்துக்கொண்டிருக்கின்றன. இதனால் பல்வேறு உயிரிழப்புக்களும், கோளாருகளும் தினந்தோரும் ஆங்காங்கு நிகழ்ந்தவண்ணமிருக்கின்றன. உலகத்தரவுகளை வைத்து நோக்கும் போது இந்தப்பட்டினிச்சாவு அநியாயமானது. தமது சுயத்தின் மீது பேராசை கொண்ட சிறு தொகை மக்கள் கூடுதல் இலாபமீட்டவும் தம் நலன் காக்கவுமாக பெருந்தொகை மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் இடையூறுகளை ஏற்படுத்தி சுகபோகத்தில் திலைத்துக் கொண்டிருக்கின்றனர். அண்மைக் காலங்களில் இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கைகள் இதனை அம்பலப்படுத்தியுள்ளன.

பல நாடுகள் எதிர்கொண்டு வரும் உணவுப்பற்றாக்குறை, கிடைக்கும் கொஞ்ச உணவிலும் ஊட்டச்சத்துக்குறைபாடு, அதனாலான நோய்கள் என்பவற்றின் காரணமாக நாளொன்றுக்கு 16000 குழந்தைகள் இறக்கநேரிடுகின்றன.

எங்கள் தேசம் பத்திரிகையில் பிரசுரமாகியது
ஆலிப் அலி (இஸ்லாஹி)

“பட்டினிச்சாவு” இன்றைய பெரும் பிரச்சினையாக காட்டுத்தீபோல் உலகம் பூராவும் பரவிவருகின்றது. யுத்தமென்றும், ஆட்கொல்லிநோய்களென்றும் பல்வகை சவால்களையும் எதிர்கொண்டு வரும் மனிதன் இன்றைய தினம் பெரும் உணவுப்பஞ்சத்திற்கும் முகம்கொடுக்க நேர்ந்துள்ளான். இன்று பல்வேறு உலக நாடுகள் இப்பிரச்சினையில் சிக்கி வெளியேற முடியாது தவித்துக்கொண்டிருக்கின்றன. இதனால் பல்வேறு உயிரிழப்புக்களும், கோளாருகளும் தினந்தோரும் ஆங்காங்கு நிகழ்ந்தவண்ணமிருக்கின்றன. உலகத்தரவுகளை வைத்து நோக்கும் போது இந்தப்பட்டினிச்சாவு அநியாயமானது. தமது சுயத்தின் மீது பேராசை கொண்ட சிறு தொகை மக்கள் கூடுதல் இலாபமீட்டவும் தம் நலன் காக்கவுமாக பெருந்தொகை மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் இடையூறுகளை ஏற்படுத்தி சுகபோகத்தில் திலைத்துக் கொண்டிருக்கின்றனர். அண்மைக் காலங்களில் இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கைகள் இதனை அம்பலப்படுத்தியுள்ளன.

பல நாடுகள் எதிர்கொண்டு வரும் உணவுப்பற்றாக்குறை, கிடைக்கும் கொஞ்ச உணவிலும் ஊட்டச்சத்துக்குறைபாடு, அதனாலான நோய்கள் என்பவற்றின் காரணமாக நாளொன்றுக்கு 16000 குழந்தைகள் இறக்கநேரிடுகின்றன.

எங்கள் தேசம் பத்திரிகையில் பிரசுரமாகியது
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...