அண்மையில் எனது நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். வரவேற்பறையில் அமர்ந்திருக்கும்போது இரண்டு சிட்டுக் குருவிகள் உள்ளே வருவதும், வெளியே செல்வதும் அங்கும் இங்கும் பறப்பதுமாக இருந்தன. அவரிடம் கேட்ட போது நீண்ட நாட்களாக இவை இங்கு இருப்பதாகவும் அங்கே சுவரில் பொறுத்தப்பட்டிருந்த மின் விளக்கில் அவை கூடுகட்டியிருப்பதாகவும் கூறினார். முன்பெல்லாம் சர்வ சாதாரணமாகக் காணக் கிடைக்கும் சிட்டுக் குருவிகளை இப்போது அரிதாகவே காண முடிகிறது. சிட்டுக் குருவிகளின் தலைமறைவுக்குப் பின்னால் ஆச்சரியமான பல விடயங்கள் இருக்கின்றன. எனவே அவை பற்றியும் சிட்டுக் குருவிகளின் வாழ்க்கை முறை பற்றியும் இத்தொடரில் உங்களுடன் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். இதோ…
10 May 2016
06 April 2016
அதிசய பாலைவனம் சஹாரா
பூமியின் ஒவ்வொரு பகுதியும் வித்தியாசமான அமைப்பில் வித்தியாசமான கால நிலையுடன் இருப்பது பூமிக்கே உரிய தனித்துவமாகும். ஒரு பக்கத்தில் கடுமையான குளிர் ஐஸ் பிரதேசங்கள், இன்னொரு பக்கத்தில் அடர்ந்த பசுமையான காடுகள், அழகான கடல், ஆறு, குலங்களைக்கொண்ட நீர் நிலைகள், மறுபுறம் பயங்கரமான பாலை நிலங்கள் என பலதரப்பட்ட அமைப்பில் காணப்படுகின்றது. உண்மையில் இவை அனைத்துக்கும் இடையில் ஒரு சங்கிலிப் பிணைப்பு இருக்கின்றது என்பதுதான் இன்றைய நவீன புவியியல் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு. இத்தொடரில் நாம் சஹாரா பாலைவனம் பற்றி சற்று நோக்குவோம்.
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
படைப்பினங்கள்
10 March 2016
சுவனத்தின் கனி மாதுளை
அரபு மொழியில் மாதுளம் பழம் ரும்மானுன் எனவும் ஆங்கிள மொழியில் Pomegranate
என்றும் அழைக்கப்படுகின்றது.
தமிழ் மொழியில் மாதுளம் பழம் எனப் இப் பெயர் வருவதற்கு சுவாரஷ்யமானதொரு காரணம் கூறப்படுகின்றது.
பெண்களின் உள்ளத்தில் பிறர் எளிதில் அறிய இயலாத வகையில் ரகசியங்கள் மறைந்திருப்பது
போல, மாதுளம்பழத்தினுள்ளும் பல
விதைகள் மறைந்திருப்பதால் மாது+உள்ளம்+பழம்= மாதுளம்பழம் எனப் பெயர் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மாதுளம் பழத்தின் தாவரவியல் பெயர் Punica
granatum என்பதாகும்.
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
படைப்பினங்கள்
12 February 2016
வெற்றியின் இரு பண்புகள்
கட்டமைப்பைப் பலப்படுத்தும் கூட்டமைப்பின் பண்புகளில் பிரதானமானவொன்றுதான் கட்டுப்பாடு.
ஒரு நிறுவனத்தின், குழுவின் அல்லது சமூகத்தின்
வெற்றி அதன் ஆரோக்கியமான தலைமைத்துவத்திலும் கட்டுப்படான அங்கத்தவர்களிலும்தான் தங்கியுள்ளது.
எத்தகைய இலக்குகள், திட்டமிடல்கள்,
வழிமுறைகள் இருந்தாலும் அவற்றைக்
கொண்டுநடாத்தக்கூடிய அங்கத்தவர்களிடம் செவி தாழ்த்துதல், கட்டுப்படுதல் என்ற பண்புகள் இல்லாதிருந்தால் ஒருக்காலும்
அந்த இலக்குகளை அடைந்துகொள்ள முடியாது.
உங்கள் கருத்து:
Labels:
சமூகவியல்,
சிந்தனைக்கு
07 February 2016
இருள் சூழ்ந்துள்ள ஆழ் கடலின் இரகசிங்கள்
நாம் வாழும் பூமிப் பந்தின் பெரும் பகுதியை ஆட்கொண்டிருப்பது கடல்தான். கடற் கரைகளும்
கடலின் மேற்பரப்பும் அதன் சில மீட்டர்கள் வரையான அடிப்பகுதியும் பார்ப்பதற்கு அழகாக
வனப்புடன் காட்சி தந்தாலும் இன்னும் கீழே செல்லச் செல்ல ஆழ்கடல் பயங்கரமானதாகவும் சுவாரஷ்யமானதாகவும்
இருக்கும். இத்தொடரில் இருள் சூழ்ந்துள்ள ஆழ்கடலின் இரகசியங்களை அலசுவோம்.
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
படைப்பினங்கள்
Subscribe to:
Comments (Atom)










