”மாயன் நாட்காட்டியின் காலம் முடிவடையப் போகின்றது, சூரிய மண்டலத்திலுள்ள கிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கப்போகின்றன. இதனால் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு சூரிய வெளிச்சமின்றி பூமி இருளில் மூழ்கியிருக்கும். “நிபிரு” என்ற கிரகம் பூமியுடன் மோத உள்ளது. இதன் மோதலால் பூமி சிதைவடையும்” என்றெல்லாம் பல்வேறு விடயங்களைக் கூறி உலக அழிவு நிகழப்போகின்றது என தற்போது பரவலாகப் பேசப்படுவதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். இவ்வாறு பேசுபொருளாக மாறியிருக்கும் உலக அழிவு நடக்கப்போவது இன்னும் பத்து, இருவது வருடங்களுக்குப் பிறகல்ல. மாறாக 2012 டிசம்பர் (இம்மாதம்) 21 ஆம் திகதியில்தான் இச்சம்பவங்கள் நடக்கப்போகின்றன என்று பல்வேறு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
21 December 2012
17 December 2012
3 மாதங்கள் இத்தா விஞ்ஞான விளக்கம்
ரொபர்ட் ஜெயில்ஹம் ஒரு கருவியல்
ஆய்வாளர் என்பதோடு ஒரு யூதரும்கூட. நீண்ட காலமாகவே அவர் ஆண்களின் DNA ரேகைப் பதிவு (DNA Finger Print) தொடர்பான ஓர் ஆய்வில்
ஈடுபட்டுவந்தார். அதில் அவர் ஓர் ஆணின் DNA ரேகைப் பதிவு மூன்று மாதங்களுக்குப் பின் அழிந்துவிடும்
என்பதைக் கண்டுபிடித்தார். இவ்வாய்;வைச் செய்வதற்காக அவர்...
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science
11 December 2012
நோயெதிர்ப்பைத் தூண்டும் தாய்ப்பால்
“இவ்வேதம் உண்மையானது என்பதை அவர்களுக்கு விளக்குவதற்காக
எமது அத்தாட்சிகளை உலகின் பல பாகங்களிலும் (ஏன்) அவர்களுக்குள்ளேயும் நாம் காண்பிக்கின்றோம்.”(41:53)
அல்லாஹ் மனிதனுள் பதித்திருக்கும் எண்ணிலடங்கா அற்புதங்களுள்
தாய்ப்பாலும் ஒன்று. தாய்ப்பால் கொண்டிருக்கும் அற்புதத்தைப் பார்த்து விஞ்ஞானிகளே
வியக்கின்றனர். தாய்க்கும் சேய்க்கும் இடையில் பலமானதொரு அன்புப் பிணைப்பை ஏற்படுத்துவதில்
தாய்ப்பால் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றது. ஒரு குழந்தையின் ஆரோக்கியமான உடலியல்
மற்றும் உளவியல் ரீதியான வளர்ச்சி, முதிர்ச்சிகளுக்கும் சிறு பருவத்தில் முறையாகத் தாய்ப்பால் பருகுவது இன்றியமையாததாகும்.
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science
10 December 2012
சிறுவர் பாலியல் பலாத்காரம் தொடர்பில் 60 பாதிரிமார்மீது வழக்கு
சிறார்களை பாலியல் பலாத்காரம்
செய்ததாக கடந்த 2000-ஆம் ஆண்டிற்கும் 2010-ஆம் ஆண்டிற்கும் இடையே 60 கிறிஸ்தவ பாதிரியார்கள் மீது வழக்குப் பதிவுச்செய்துள்ளதாக ஜெர்மனியின்
தலைநகரான பெர்லினில் கத்தோலிக்க சர்ச் தெரிவித்துள்ளது. சர்ச் வெளியிட்டுள்ள
ஆய்வறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
உங்கள் கருத்து:
Labels:
சமூகவியல்,
திடீர் NEWS
22 November 2012
விஞ்ஞான, தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் ஹொலிவுட் திரைப்படங்கள்
நவீன திரைப்படக் கலாசாரமானது
பலரையும் தன்வயப்படுத்தும் அதீத ஆற்றலைக் கொண்டுள்ளது. சிறியோர் முதல் முதியோர்வரை
அனைவரையும் இழுத்துக் கட்டிப்போடும் பல்வேறு உத்திகளை இன்றைய திரைப்படங்கள் கையாள்கின்றன.
திரைப் படப்பிடிப்புத் துறையில் வளர்ச்சியுற்றிருக்கும் பல்வேறு தொழில்நுட்ப முறைகளே
இதற்குக் காரணம் எனலாம். ஆரம்ப காலங்களில் இருந்த கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சிகள், அதில் ஒளிபரப்பப்பட்ட
கருப்பு வெள்ளைத் திரைப்படங்கள், பேசும் திரைப்படங்கள் அதன்பின்னர் வெளிவந்த வண்ணத் தொலைக்காட்சிகள்
வண்ணத் திரைப்படங்கள் என திரைப்படங்களின் வளர்ச்சி துரிதமாக எழுச்சியுற்று வந்துள்ளது.
அத்தோடு இன்று LCD, LED மற்றும் 3D தொழில்நுட்பங்களில் மலிந்துபோயிருக்கும் தொலைக்காட்சிகளாலும்
திரைப்படத் தயாரிப்புகள் முன்பைவிட அதிகரித்துள்ளன.
இவ்வாக்கத்தை எங்கள்தேசம் பத்திரிகையில் பிரசுரித்துள்ளேன்.
உங்கள் கருத்து:
Labels:
திரை விமர்சனம்,
தொழில்நுட்பம்
Subscribe to:
Posts (Atom)





.jpg)







