1997 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வெளியான அனகோண்டா திகில் திரைப்படத்தினூடாகத்தான் உலக மக்களில் அதிகமானவர்களுக்கு அனகோண்டா பாம்புகள் பற்றி தெரியவந்தது. இத்திரைப்படம் பல கோடிகளை ஈட்டி வெற்றி பெற்றது. வெற்றியின் காரணமாக இதனைக் கருவாக வைத்து தொடர்ச்சியாக இன்னும் சில படங்களும் வெளியிடப்பட்டன. உண்மையிலேயே இவ்வளவு பிரம்மாண்டமான பாம்பு உள்ளதா? கொடூரமானதா? பெரிய விளங்குகளையும் வேட்டையாடுமா? மனிதர்களையும் கொன்று தின்னுமா? என்றெல்லாம் கேள்வி எழும்பியது அதனைத் தொடர்ந்துதான். இனி பல்வேறு வாய் வதந்திகளும், கட்டுக் கதைகளும் அன்றைய தினங்களில் பரவின. எனவே டிஸ்கவரி போன்ற சில டீவீ செனல்கள் அனகோண்டா பாம்புகளின் உண்மைச் செய்திகளை ஆவணப்படமாக வெளியிட ஆரம்பித்தன.
அஷ்.ஆலிப் அலி08 May 2021
29 December 2020
இறந்த பின்பும் உடல் வேதனையை உணர்கின்றது - விஞ்ஞானிகள் தெரிவிப்பு. எரிப்பதா? புதைப்பதா?
பொதுவாகவே இறந்த சடலங்களை
அடக்கம் செய்வதா? தகனம் செய்வதா? எது சிறந்தது? என்ற வாத விவாதங்கள் நீண்ட காலமாகவே
இருந்து வருகின்றன. என்றாலும் கொரோனாத் தொற்றின் பரவலோடு இக்கதையாடல் இன்னும் சூடுபிடித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளாகி இறந்துபோனவர்களது சடலங்களை அடக்கம் செய்வதா? தகனம் செய்வதா? அடக்கம் செய்வதால் ஏதும் பின்விளைவுகள், பாதிப்புகள் ஏற்படுமா? எரித்துவிடுவது சிறந்ததா? என பல வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக இங்கு சில தெளிவுபடுத்தல்களை
வழங்கலாம் என்று நினைக்கின்றேன்.
அஷ்.எம்.என்.ஆலிப்
அலி (இஸ்லாஹி) B.A
Dip. In
psychological Counseling, Al-Quran & Science researcher.
உங்கள் கருத்து:
19 December 2020
ராட்சதப் பல்லி - கொமோடோ டிராகன்.
இந்தோனேசியத் தீவுகளில் அதிலும் கொமோடோத் தீவுகளில் அதிகமாக வாழும் ஒரு உயிரினம்தான்
இந்த கொமோடோ டிராகன் (Comodo dragon). இவை தமிழில் கொமோடோ உடும்பு அல்லது கொமோடோ பல்லி என அழைக்கப்படுகின்றன. வாரனஸ்
கொமோடோயென்சிஸ் என்ற அறிவியற் பெயரில் அழைக்கப்படும் இவை வரானிடே என்ற உடும்பு குடும்பத்தில்
அடங்குகின்றன. உலகில் உள்ள பல்லி வகைகளிலேயே மிகப்பெரிய வகையும் இதுதான். பார்ப்பதற்கு
அச்சத்தை ஊட்டும் தோற்றத்தைக் கொண்டிருக்கும். தோற்றத்தில் அகன்ற, தட்டையான தலை, உருண்டையான வாய்ப் பகுதி, வளைந்த குட்டைக் கால்கள், பெரிய சதைப்பற்றான நீண்ட வால், சாம்பல் நிறத் தோல் என்பவற்றைக் கொண்டுள்ளன. இவை சுமார் பத்து
அடி நீளமும், 80 கிலோ எடையும் கொண்ட
ராட்சதப் பல்லிகளாகும்.
உங்கள் கருத்து:
20 October 2020
கற்பக விருட்சம் தென்னை
“பிள்ளையைப் பெத்தா கண்ணீரு; தென்னையைப் பெத்தா இளநீரு” இப்படி ஒரு பாடல் வரி
உண்டு. “ஒன்ன வளக்குறத இரண்டு தென்னை மரத்த வளர்த்திருக்கலாம்! “பிள்ளைகளைப் பெற்று
அவர்களால் மனம் வருந்திக்கொண்டிருக்கும் பெற்றோர் இப்படியான வார்த்தைகளைக் கூறுவதை
முன் சென்ற பரம்பரையினரிடம் அடிக்கடி கேட்க முடியும். இதில் தென்னையை உதாரணமாகக் கூறியிருப்பது
தென்னையின் மகிமையும் அதன் பயன்பாடுகளும் மனிதனைவிட அதிகமாக இருக்கின்றது என்பதனால்தான்.
இத்தொடரில் தென்னையின் அற்புதப் பயன்கள் பற்றி அறிந்துகொள்வோம்.
அஷ்.ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
29 September 2020
சவால்களை எதிர்கொள்ளும் இகுவானா பல்லிகள்.
அறிமுகம்.
நீங்கள் இங்கு படத்தில் காண்பது ஆங்கிலத்தில் இகுவானா (Iguana) எனவும் தமிழில் பேரோந்தி எனவும் அறியப்படும் ஒருவகைப் பல்லி இனத்தைத்தான். இது உலகில் வாழும் மிக அறிய மற்றும் அற்புதமான உயிரினங்களில் ஒன்று. இந்த இகுவானாக்கள் தற்போது மத்திய மற்றும் தென் அமெரிக்கா, மெக்ஸிகோ, கலாபிகஸ் தீவுகள், கரிபியன் தீவுகள், பிஜி மற்றும் மடகஸ்கார் ஆகிய பகுதிகளில் பரவலாக வாழ்கின்றன. பிறந்ததிலிருந்து பல அபாயகரமான கட்டங்களைக் கடந்து, தமது உயிரைத் தக்கவைத்துக்கொள்வதற்காக பல்வேறு போராட்டங்களை நடாத்தி உயிர் தப்பி வாழும் ஆச்சரியமான வாழ்க்கைப் பாடத்தை இவை நமக்கு சொல்லித்தருகின்ன. இவற்றிலிருந்தும் பாடம் கற்போம் வாருங்கள்.









