இன்று உலக ஊடகங்களின் பரவலான பேசுபொருள் சென்னை நகரை மழை வெள்ளம்
மூழ்கடித்தபோது இந்திய முஸ்லிம்கள் தமது இந்துச் சகோதரர்களுக்கு செய்த நிவாரணப் பணி
குறித்ததுதான். வழமையாக இந்தியாவில் டிசம்பர் 6 என்றால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கெதிரான
ஆர்ப்பாட்டங்கள் கொடிகட்டும். ஆனால் அதே இந்த டிசம்பர் 6 முஸ்லிம் இந்து சகோதரர்களுக்கிடையிலான
நட்புறவு மலரக் காரணமாகியுள்ளது.
08 December 2015
01 December 2015
ஆழ்கடல் முதல் அர்ஷ் வரை
கடலின் மேல் மட்டத்திலிருந்து
40 மீட்டர் தூரம் வரைதான்
திறமைவாய்ந்த நீச்சல் வீரர்கள்கூட பாதுகாப்பான நீச்சல் உடைகளுடன் ஒக்சிஜன் சிலின்டர்களையெல்லாம்
சுமந்துகொண்டு மூழ்குவார்கள். இதற்கு அப்பால் நீச்சல் உடையுடன் நீந்திச் செல்வது உயிராபத்தை
ஏற்படுத்தும். எனவே ஒரு நீர் மூழ்கியின் உதவியுடன்தான் செல்லவேண்டும். கடலின் மேல்
மட்டத்திலிருந்து 301 மீட்டர் ஆழம்வரை
சென்றால் இது பிரான்ஸில் உள்ள உலகப் பிரபல்யம்வாய்ந்த ஈபில் கோபுரத்தின் (Eiffel tower) உயரத்திற்கு நிகரான
ஆழமாகும். இன்னும் கீழே 500 மீட்டர் ஆழம் வரையான
பகுதியில்தான் நீளத் திமிங்கிளங்கள் சஞ்சரிக்கின்றன. இதற்கு அப்பால் இவற்றால்கூட செல்லமுடியாது.
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
படைப்பினங்கள்
Subscribe to:
Posts (Atom)