நாம் ஒரு விடயத்தை
உண்மைப் படுத்துவதற்காக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுவோம். அவ்வாறு அல்லாஹ்
ஒரு விடயத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவானென்றால் அதன் மீது சத்தியம் செய்வான்.
இரவு, பகல், சூரியன், சந்திரன், வானம், பூமி, மலைகள் என்று பலவற்றின்
மீதும் சத்தியம் செய்துள்ளான். அதேபோன்றுதான் அல்குர்ஆனில் 95 ஆம் அத்தியாயம் 1 ஆம் வசனத்தில் வத்Zஸைதூன் என ஸைதூனின்
மீது சத்தியமிட்டுள்ளான். மற்றுமொரு இடத்தில் அது பரகத் நிறைந்த்து என்றும் கூறுகின்றான்.
முஸ்லிம்கள் எம்மைப்போன்று யூத, கிறிஸ்தவர்களும் இதனை கண்ணியமான, புன்னியமான ஒன்றாகப்
பார்க்கின்றனர். அப்படி என்னதான் அதில் முக்கியத்துவம் இருக்கின்றது என்று பார்ப்போம்.
20 August 2019
Subscribe to:
Posts (Atom)