எமது இலங்கை நாட்டின் இன்றைய சூழ்நிலைக்கு மிகவும் பொருந்திச் செல்லும் ஒரு சீரியல். "La víctima número 8 - victim number 8" (எட்டாவது பலி) என்ற ஸ்பானிஷ் தொலைக்காட்சித் தொடர் Netflix இல் காணக் கிடைக்கிறது. ஒரு நாட்டின் அரச புலனாய்வுத்துறையினர் பயங்கரவாத குண்டுத் தாக்குதலை நடத்தி விட்டு, அதைச் செய்தவர்கள் ஜிகாதி தீவிரவாதிகள் என்று சொல்லி ஒரு அப்பாவி அரபு இளைஞனை பலியாடு ஆக்குவது தான் கதைக்கரு. படத்தில் ஒமார் ஜமால் என்ற அரபு இளைஞனாக ஒரு ஸ்பானிஷ் நடிகரே நடித்துள்ளார். தமிழில் வெளியான விசாரணை படத்தின் பாணியில் தான் இந்தத் தொடர் எடுக்கப் பட்டுள்ளது.
21 September 2019
13 September 2019
கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்...
எனது எதிர்காலத்திற்காக ஆரம்பப்பாடசாலையில் படித்தேன். பிறகு என்னுடைய எதிர்காலத்திற்காக
சாதாரண தரம் படிக்கச் சொன்னார்கள். படித்தேன். பின்னர் என் எதிர்காலத்திற்காய் உயர்தரத்தையும் படிக்கச்சொன்னார்கள்.
அதனையும்
படித்தேன். தொடர்ந்து எனது எதிர்காலத்திற்காய்
இளமாணிக்கற்கையையும் தொடரும்படி சொன்னார்கள். அதன்பிறகு என் எதிர்காலத்திற்காய் தொழிலொன்றைத்
தேடும்படி சொன்னார்கள். தேடினேன். பின்னர் எனது எதிர்காலத்திற்காய்
திருமணம் முடிக்கச் சொன்னார்கள். முடித்தேன்.
உங்கள் கருத்து:
Labels:
சிந்தனைக்கு
20 August 2019
அருள் நிறைந்த ஸைதூன் - ஒலிவ்
நாம் ஒரு விடயத்தை
உண்மைப் படுத்துவதற்காக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுவோம். அவ்வாறு அல்லாஹ்
ஒரு விடயத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவானென்றால் அதன் மீது சத்தியம் செய்வான்.
இரவு, பகல், சூரியன், சந்திரன், வானம், பூமி, மலைகள் என்று பலவற்றின்
மீதும் சத்தியம் செய்துள்ளான். அதேபோன்றுதான் அல்குர்ஆனில் 95 ஆம் அத்தியாயம் 1 ஆம் வசனத்தில் வத்Zஸைதூன் என ஸைதூனின்
மீது சத்தியமிட்டுள்ளான். மற்றுமொரு இடத்தில் அது பரகத் நிறைந்த்து என்றும் கூறுகின்றான்.
முஸ்லிம்கள் எம்மைப்போன்று யூத, கிறிஸ்தவர்களும் இதனை கண்ணியமான, புன்னியமான ஒன்றாகப்
பார்க்கின்றனர். அப்படி என்னதான் அதில் முக்கியத்துவம் இருக்கின்றது என்று பார்ப்போம்.
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
ஆய்வு
07 July 2019
யார் அழுவார் நீ உயிர் துறக்கையிலே?
"நீ அழுத வண்ணம் பிறந்த போது உன் வரவால் உலகம் மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டு உன்னை வரவேற்றது, பிரிவின் போது துயரில் உலகம் அழுது கொண்டிருக்க நீ சிரித்துக் கொண்டே விடை பெற வேண்டும். மாறாக...நீ அழுது கொண்டே விடைபெற உலகம் சிரித்துக் கொண்டிருக்கும் நிலை வரக் கூடாது."
இமாம் ஷாஃபி (ரஹ்)
உங்கள் கருத்து:
Labels:
சிந்தனைக்கு
31 May 2019
பாரம் சுமக்கும் கழுதைகள்
“கழுதை, Donkey, பூBருவா” என்று எந்தப் பாசையில் சொன்னாலும் யாரையாவது திட்டுவதுபோன்றுதான் தோன்றும். ஏனெனில்
இன்றளவில் அந்தச் சொல் கழுதைகளுக்குப் பயன்படுவதைவிட
மனிதர்களுக்குத்தான் அதிகளவில் பயன்படுகின்றது. கழுதைகள் உண்மையிலேயே தோற்றத்திலும்
குணவியல்புகளிலும் விசித்திரமான விலங்குதான். இத்தொடரில் கழுதைகளின் சுவாரஷ்யமான சில
பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம்.
அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
ஆய்வு,
படைப்பினங்கள்
Subscribe to:
Posts (Atom)







