ஒரு விடயத்தை ஆழமாக விளங்கி விசுவாசிக்கும்போதுதான் அதன் சுவையும் கனதியும் உள்ளத்தில் ஆழப்பதிகின்றது. அதுமட்டுமன்றி ஈமானும் பலம்பெறுகின்றது. ஆன்மா, ஆன்மிகம் சம்பந்தமாக பல மதங்களும் பேசியுள்ளன. ஆனால் இஸ்லாம் கூறும் ஆன்மாவின் உண்மைத் தன்மையோ அது மனிதனை இறைவனிடம் நெருங்கவைத்து மனிதப் படைப்பின் நோக்கத்தைப் புறியவைக்கின்றது. அந்தவகையில் மனித ஆன்மாவின் பயணத்தொடர் குறித்து இக்கட்டுரையில் சற்று விளங்க முயற்சிப்போம்.
இறைவனின் படைப்புகளிலே மிகவும் உயர்ந்த படைப்பு மனிதன்தான். காரணம் யாதெனில் எந்தவொரு படைப்புக்கும் வழங்கப்படாத ‘ஆன்மா’ என்ற ஒரு அம்ஷம் மனித உடலில் காணப்படுகின்றது. இவ்வான்மா பறவைகளுக்கோ மிருகங்களுக்கோ தாவரங்களுக்கோ எம் கண்களுக்குப் புலப்படாத நுண்உயிரிகளுக்கோ வழங்கப்படவில்லை. மனிதனுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
ஒரு விடயத்தை ஆழமாக விளங்கி விசுவாசிக்கும்போதுதான் அதன் சுவையும் கனதியும் உள்ளத்தில் ஆழப்பதிகின்றது. அதுமட்டுமன்றி ஈமானும் பலம்பெறுகின்றது. ஆன்மா, ஆன்மிகம் சம்பந்தமாக பல மதங்களும் பேசியுள்ளன. ஆனால் இஸ்லாம் கூறும் ஆன்மாவின் உண்மைத் தன்மையோ அது மனிதனை இறைவனிடம் நெருங்கவைத்து மனிதப் படைப்பின் நோக்கத்தைப் புறியவைக்கின்றது. அந்தவகையில் மனித ஆன்மாவின் பயணத்தொடர் குறித்து இக்கட்டுரையில் சற்று விளங்க முயற்சிப்போம்.
இறைவனின் படைப்புகளிலே மிகவும் உயர்ந்த படைப்பு மனிதன்தான். காரணம் யாதெனில் எந்தவொரு படைப்புக்கும் வழங்கப்படாத ‘ஆன்மா’ என்ற ஒரு அம்ஷம் மனித உடலில் காணப்படுகின்றது. இவ்வான்மா பறவைகளுக்கோ மிருகங்களுக்கோ தாவரங்களுக்கோ எம் கண்களுக்குப் புலப்படாத நுண்உயிரிகளுக்கோ வழங்கப்படவில்லை. மனிதனுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
எம்மில் பலர் இவ்வுலக வாழ்க்கை நித்தியமற்றதென அறிந்திருந்தபோதிலும் ஷைதானுக்குக் கட்டுப்பட்டு மனோ இச்சைக்கு வலிப்பட்டு அதன்படி வாழ்ந்து மடிகின்றனர். இவ்வுலகில் உயர்ந்த அறிவார்ந்த படைப்பாகிய மனிதன் வெறும் உடலிச்சைகளையும் மனோ இச்சைகளையும் மாத்திரம் தீர்த்துக்கொண்டு அவன் படைக்கப்பட்டதன் உண்ணத நோக்கத்தை புரிந்துகொள்ளாமல் பொருளாதாரத்தை ஈட்டுவதில் மாத்திரம் குறியாய் வாழ்ந்து குறுகிய ஆயுளைச் செலவு செய்துவிட்டு இறந்துவிடுவதென்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதவொன்று.
இவ்வுலகின் யதார்த்தம் யாதெனில் இது நிரந்தரமற்றது. அற்பமானது. இது இன்பமனுபவிப்பதற்கான இடமல்ல. இதுவொரு சோதனைக்களம். மனிதனின் நிரந்தரமான நித்திய வாழ்க்கை மறுமையில்தான் அமைகின்றது. இம்மை என்பது தற்காலிகத் தங்குமிடம் மாத்திரம்தான். இவ்வுலகம் பெறுமதியற்றது, கவர்ச்சிகரமிக்கது, வீணும் விளையாட்டும் நிரம்பியது. அல்லாஹ்விடத்திலும் நபிகளாரிடத்திலும் இவ்வுலக வாழ்க்கைக்கு எப்பெருமானமும் இருக்கவில்லை. அல்லாஹ் இதுபற்றி அல்-குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்.
பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரி Dr.ஆஃபியா 2003 மார்ச் 30ல் பாகிஸ்தான் உளவுத்துரையினால் கைதுசெய்யப்பட்டு அமெரிக்க FBI இடம் விசாரனைக்காக ஒப்படைக்கப்பட்டார்.
“உஸாமாபின் லேடனின் தீவிரவாத அமைப்புக்கு நிதியுதவிகள் செய்துள்ளார்” என்ற போலிக் குற்றச்சாட்டுகளை அவர்மீது சுமத்தியே விசாரனையென்ற பெயரில் அவரைக் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட அவர் ஆப்கானிஸ்தான் பக்ரம் (Bagram) சிறையில் அடைக்கப்பட்டு வாய்விட்டுச் சொல்லமுடியாதளவு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சிறைக்காவலர்களால் மோசமான முறையில் பாலியல் சித்திரவதைகளுக்கும் ஆளாகியுள்ளார்.
இக்கொடுமையை 2008 ஜுலை 06ஆம் திகதி பிரபல முன்னால் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் இவோன் ரெட்லி அம்பலத்துக்குக் கொண்டுவந்துள்ளார். அவர் சகோதரி ஆபியாவின் விடுதலைக்கான நடவடிக்கைகளில் களமிறங்கி செயற்பட்டுவருகின்றார்.
நிவ்யோக் நீதிமன்றத்தில்; குற்றம் நிருபனமானால் அவருக்கு 20 ஆண்டுகள் கடூழியச்சிறைத்தண்டனை வழங்கப்படும். ஏற்கனவே அவர் பட்டிருக்கும் வேதனைகளோ சொல்லிற்கடங்காதவை. இந்நிலையில்……
உடன் பிறவா அச்சகோதரியை எமது பிரார்த்தனைகளில் சேர்த்துக்கொள்வோம். அவரது விடுதலைக்காய்ப் பிரார்த்தித்து அநீதிக்கெதிராகக் குறல்கொடுப்போம்.
பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரி Dr.ஆஃபியா 2003 மார்ச் 30ல் பாகிஸ்தான் உளவுத்துரையினால் கைதுசெய்யப்பட்டு அமெரிக்க FBI இடம் விசாரனைக்காக ஒப்படைக்கப்பட்டார்.
“உஸாமாபின் லேடனின் தீவிரவாத அமைப்புக்கு நிதியுதவிகள் செய்துள்ளார்” என்ற போலிக் குற்றச்சாட்டுகளை அவர்மீது சுமத்தியே விசாரனையென்ற பெயரில் அவரைக் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட அவர் ஆப்கானிஸ்தான் பக்ரம் (Bagram) சிறையில் அடைக்கப்பட்டு வாய்விட்டுச் சொல்லமுடியாதளவு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சிறைக்காவலர்களால் மோசமான முறையில் பாலியல் சித்திரவதைகளுக்கும் ஆளாகியுள்ளார்.
இக்கொடுமையை 2008 ஜுலை 06ஆம் திகதி பிரபல முன்னால் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் இவோன் ரெட்லி அம்பலத்துக்குக் கொண்டுவந்துள்ளார். அவர் சகோதரி ஆபியாவின் விடுதலைக்கான நடவடிக்கைகளில் களமிறங்கி செயற்பட்டுவருகின்றார்.
நிவ்யோக் நீதிமன்றத்தில்; குற்றம் நிருபனமானால் அவருக்கு 20 ஆண்டுகள் கடூழியச்சிறைத்தண்டனை வழங்கப்படும். ஏற்கனவே அவர் பட்டிருக்கும் வேதனைகளோ சொல்லிற்கடங்காதவை. இந்நிலையில்……
உடன் பிறவா அச்சகோதரியை எமது பிரார்த்தனைகளில் சேர்த்துக்கொள்வோம். அவரது விடுதலைக்காய்ப் பிரார்த்தித்து அநீதிக்கெதிராகக் குறல்கொடுப்போம்.
எனது சிந்தனைப்படி யூத நாடு என்ற கருத்து பிழையானது. அது ஏன் தேவை என்பதை என்னால் விளங்க முடியவில்லை. அதனுடன் குறுகிய மனப்பான்மையும் பொருளாதாரத்தடைகளும் தொடர்புருகின்றன. அது தீமையானது என நான் நம்புகின்றேன். நான் அதற்கு எதிராகவே இருந்து வருகின்றேன்.
யூத நாடொன்று அமைப்பதைவிட அரேபியர்களுடன் சேர்ந்து வாழக்கூடிய பொருத்தமான உடன்படிக்கைக்கு வருவதை நான் ஆதரிக்கின்றேன். நடைமுறைப் பிரச்சினைகளுக்கு அப்பால் நாட்டுக்கான எல்லைகள், இராணுவம், தற்காலிக அதிகாரத்துக்கான ஏற்பாடு என்பவை எவ்வளவுதான் எளிமையானவையாக இருந்தாலும், யூத மதம் பற்றிய எனது அறிவைப் பொருத்தவரை யூத நாடு என்ற கருத்தை யூத மதம் எதிர்க்கின்றது. இதன் காரணமாக யூத மதம் சந்திக்கப்போகும் இழப்பு பற்றி நான் அச்சம் கொள்கின்றேன். ஐன்ஸ்டீனின் “Out of my later years” என்ற நூலிலிருந்து. ஆலிப் அலி (இஸ்லாஹி)
உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன்
எனது சிந்தனைப்படி யூத நாடு என்ற கருத்து பிழையானது. அது ஏன் தேவை என்பதை என்னால் விளங்க முடியவில்லை. அதனுடன் குறுகிய மனப்பான்மையும் பொருளாதாரத்தடைகளும் தொடர்புருகின்றன. அது தீமையானது என நான் நம்புகின்றேன். நான் அதற்கு எதிராகவே இருந்து வருகின்றேன்.
யூத நாடொன்று அமைப்பதைவிட அரேபியர்களுடன் சேர்ந்து வாழக்கூடிய பொருத்தமான உடன்படிக்கைக்கு வருவதை நான் ஆதரிக்கின்றேன். நடைமுறைப் பிரச்சினைகளுக்கு அப்பால் நாட்டுக்கான எல்லைகள், இராணுவம், தற்காலிக அதிகாரத்துக்கான ஏற்பாடு என்பவை எவ்வளவுதான் எளிமையானவையாக இருந்தாலும், யூத மதம் பற்றிய எனது அறிவைப் பொருத்தவரை யூத நாடு என்ற கருத்தை யூத மதம் எதிர்க்கின்றது. இதன் காரணமாக யூத மதம் சந்திக்கப்போகும் இழப்பு பற்றி நான் அச்சம் கொள்கின்றேன். ஐன்ஸ்டீனின் “Out of my later years” என்ற நூலிலிருந்து. ஆலிப் அலி (இஸ்லாஹி)
இப்படத்தில் நீங்கள் காண்பதுபோன்று 'வாள் முனையில் பரப்பப்பட்ட மார்க்கம்தான் இஸ்லாம்" என்று இஸ்லாம் குறித்த சரியான வரலாற்று நோக்கை அறியாதோரும் மற்றும் இஸ்லாத்தின் மீது துவேச உணர்வுகளை வெளிப்படுத்துவோரும் தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். இஸ்லாத்தைப் பற்றி தவறான கருத்துக்களைப் பிரச்சாரம் செய்யவென்றே இயங்கும் ஒரு அமைப்புதான் மேலுள்ள படத்தில் காண்கிறீர்கள். உண்மையிலேயே இது மடமைத்தனமானதொரு குற்றச்சாட்டு என்பதை பக்கசார்பின்றி நோக்கும் முஸ்லிமல்லாதோரின் கருத்துக்களிலிருந்து விளங்கலாம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
இப்படத்தில் நீங்கள் காண்பதுபோன்று 'வாள் முனையில் பரப்பப்பட்ட மார்க்கம்தான் இஸ்லாம்" என்று இஸ்லாம் குறித்த சரியான வரலாற்று நோக்கை அறியாதோரும் மற்றும் இஸ்லாத்தின் மீது துவேச உணர்வுகளை வெளிப்படுத்துவோரும் தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். இஸ்லாத்தைப் பற்றி தவறான கருத்துக்களைப் பிரச்சாரம் செய்யவென்றே இயங்கும் ஒரு அமைப்புதான் மேலுள்ள படத்தில் காண்கிறீர்கள். உண்மையிலேயே இது மடமைத்தனமானதொரு குற்றச்சாட்டு என்பதை பக்கசார்பின்றி நோக்கும் முஸ்லிமல்லாதோரின் கருத்துக்களிலிருந்து விளங்கலாம்.