துருக்கியின் பிரதமர் தைய்யிப் எர்துகான்
ஜனாதிபதியானதைத் தொடர்ந்து புதிய பிரதமராக அஹமத் தாவுத் ஒக்லோ பதவியேற்றுள்ளார். அத்தோடு
அண்மையில் அவர் தனது டிவிட்டர் கணக்கினூடாக துருக்கி அரசாங்கத்தின் இலக்குகளையும், பணிக்கூற்றையும் வெளியிட்டுள்ளார். “தமது முழு முதல் இலக்கு சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதாகும்
என்பதோடு இது எமது நாட்டுக்கு மட்டுமல்ல எமது பிராந்தியத்துக்குமானது” என்று கூறியுள்ளார். "Our main goal is to build a better future for not only
our country but the region as a whole"
01 September 2014
27 August 2014
ஹமாஸின் வெற்றி சியோனிசத்தின் தோல்வி
உலக வரலாற்றை நோட்டமிட்டால் ஓர் உண்மை புரியும். பலஸ்தீனம் யார் கையில் செல்கிறதோ உலகம் அவர்கள் கைவசமாகும். அந்த குறிக்கோலுக்காகத்தான் கிறிஸ்துக்கு முன்பிருந்தே பலஸ்தீனைத் தம் வசப்படுத்த பல சக்திகள் படையெடுத்துள்ளன. பாபிலோனியர்கள், பாரஸீகர்கள், ரோமர்கள், யூதர்கள், கிறிஸ்தவ சிலுவை யுத்தம், ஆங்கிளேயப் படையெடுப்பு, பிரித்தானிய காலணித்துவம், மீண்டும் அமெரிக்க, ஐரோப்பிய கூட்டுச் சக்திகளின் இஸ்ரேல் என்ற உருவாக்கம். இவை அனைத்தும் பலஸ்தீனை மையப்படுத்தி அமைந்ததற்கு இது ஒரு காரணம். பலஸ்தீன் அது அருள்பாளிக்கப்பட்ட பூமி. மட்டுமல்ல அருள்பாளிக்கப்பட்ட போராளிகளைக்கொண்ட பூமியும்கூட. உலகில் எங்கு சென்றாலும் எதையும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் ஷஹாதத் என்ற அருளை அங்குதான் இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
உங்கள் கருத்து:
Labels:
சா்வதேசம்,
திடீர் NEWS
25 August 2014
ரிச்சர்டு அட்டன்பரோ மரணம்
உலகப்
புகழ்பெற்ற இயக்குநரும் நடிகரும் ஒஸ்கார் விருது பெற்றவருமான ரிச்சர்டு அட்டன்பரோ (Richard Attenborough)
தனது 90 ஆவது வயதில் நேற்று காலமாகிவிட்டார். ஜுராசிக்
பார்க், பிரிட்டன்
ராக், தி கிரேட் எஸ்கேப் போன்ற படங்களில் தனது நடிப்புத் திரமையை
அபாரமாக்க் காட்டி புகழ்பெறவர் என்பது அனைவரும் அறிந்த்து. அத்தோடு மகாத்மா
காந்தியின் வரலாற்றைத் திரைக் கதையாகத்
தந்தவரும் இவர்தான். அதற்காக இவருக்கு இரட்டை
ஆஸ்கர் விருதும் கிடைத்தது. நேற்று (24.8.14) நண்பகல்
உணவு அருந்திக் கொண்டிருக்கும்போதே
மரணமடைந்துள்ளார். பிரிட்டன் பிரதமர் உட்பட உலகம் முழுவதும்
உள்ள ஏராளமான ரசிகர்கள்
அட்டன்பரோவுக்கு இரங்கல்
தெரிவித்துள்ளனர்.
உங்கள் கருத்து:
Labels:
திடீர் NEWS,
திரை விமர்சனம்
12 August 2014
துருக்கி ஜனாதிபதித் தேர்தலின் பின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற எர்துகான் மக்கள் முன் ஆற்றிய முதல் உரை.
இந்தத் தேர்தலில்
எனக்கு வாக்களித்த, வாக்களிக்காத அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த
நன்றிகள். அவுஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்கா வரைக்கும், எனக்காக
பிரார்த்தித்த, தங்களது
வாக்குகளை உரிய முறையில் வழங்கிய அனைத்து துருக்கியருக்கும் எனது நன்றிகள். இன்று, புதிய
துருக்கி வெற்றி பெற்றுள்ளது, 81 மாகாணங்கள் வெற்றி பெற்றுள்ளன. துருக்கி
மாத்திரம் அல்ல, பொஸ்னியா, அர்பில், இஸ்லாமாபாத், காஸா
வெற்றி பெற்றுள்ளன! சென்ற றமலான்
மாதத்தில் அனைத்து இடர்களையும் பாராது எமது கூட்டங்களில் கலந்து முழு ஆதரவையும்
வழங்கிய உங்களுக்கு எவ்வளவு நன்றி செலுத்தினாலும் போதாது. இன்று பழைய ஒரு தவணையை
முடித்து விட்டு புதிய ஒரு துருக்கிக்கான நுழைவாயிலில் கால் தடம் பதிக்கின்றோம்.
இன்றிலிருந்து சன்கயாவுக்கும் (ஜனாதிபதி மாளிகை) மக்களுக்கும் இடையிலான அனைத்து
தடைகளும் தகர்க்கப்பட்டு விட்டன. இனிமேல், இந்த நாட்டின் விதி முழுமையாக
இருக்கப்பெரும் மக்களுக்கு நான் ஒரு அமானிதமாக வழங்கப்பட்டுலேன்.
உங்கள் கருத்து:
10 August 2014
நெருப்பு பற்றி நாமறிந்த, அறியாத விடயங்கள்
பெதுவாக நோக்குகையில் தீப்பிடித்தல்
என்பது சூழலில் உள்ள எரியும் தன்மைகொண்ட ஒரு பொருளை மிகையாக வெப்பமேற்றும்போது அதனுடன்
வளிமண்டலத்தில் உள்ள ஒட்சிசன் அணுக்களும் சேர்ந்து வெப்பமடைவதால் அங்கு திடீரென தீப்பிடிக்கின்றது.
ஒரு மரக்கட்டை 150 செல்சியஸ் பாகையில்
வெப்பமேற்றப்படும்போது தீப்பிடிக்கின்றது. ஆதிகால மனிதன் நெருப்பை இவ்வாறான முறைகளில்தான்
உருவாக்கி பயன்படுத்தினான். இரு கூழாங்கற்களை உராய்வதன் மூலமும், இரு மரக்கட்டைகளை
ஒன்றோடொன்று உராய்ந்தும் நெருப்பை உண்டாக்கினான். காடுகளில் உள்ள மரங்கள் இரண்டு காற்றடிக்கும்போது
ஒன்றோடொன்று உராய்வதால் தீப்பற்றி அது காட்டுத்தீயாகப் பரவுகின்றது. அறிவியல் வளர்ச்சியினால் இன்று கந்தகம் கொண்டு தீக்குச்சி, எரிவாயுக்களைக்கொண்டு
லைட்டர் என்பன தயாரிக்கப்படுகின்றன.
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
படைப்பினங்கள்
Subscribe to:
Posts (Atom)










